6
அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்
விரைவில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடாயிற்று . ஐன்ஸ்டீன் மளமளவென்று தம்முடைய க்வாண்டம் தியரியைப் பற்றிப் பேசிக்கொண்டே சென்றார்.
ஆனால், அதில் ஒரு வார்த்தை கூட அங்கிருந்தோர் யாருக்குமே விளங்கவில்லை.
(2)
தொடக்கமும் முடிவும்
பிரசித்தி பெற்ற கதாசிரியர் அலெக்ஸாண்டர் டூமாஸை, ஒருவர் சந்தித்தார். அவர் தலைக்கனம் கொண்டவர், டூமாஸை மட்டம் தட்ட வேண்டும் என்பது அவருடைய எண்ணம்.
“உங்கள் மூதாதையரைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் கீழ்த்தர வகுப்பமாமே!” என்றார் தலைக்கனம் கொண்டவர்.
அமைதியாக, "ஆமாம்” என்றார் டுமாஸ்.
“உங்கள் தந்தை?”- வந்தவர் கேட்டார்.
“மலை ஜாதியினர்” என்றார் டுமாஸ்.
“உங்கள் தாத்தா?” வந்தவர் கேட்டார்
"நீக்ரோ” என்றார் டுமாஸ்.
“தாத்தாவுக்குத் தாத்தா?’ வந்தவர் கேட்டார்.
பொறுமை இழந்து விட்டார் டுமாஸ். “அவர் ஒரு வால் இல்லாக் குரங்கு! ஆனால் ஒன்று என் வம்சம் தொடங்கிய