பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/126

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78 / அயோத்திதாசர் சிந்தனைகள்


நாஷனல் காங்கிரஸென்னும் பெயர் இக்கூட்டத்தாருக்குப் பொருந்தாத தினால் மிதவாதிகள் என்றும், அமிதவாதிகள் என்றும் இருகட்சிகள் பிரிந்து கூட்டத்தைக் கலைத்துவிட்டார்கள்,

அத்தகையக் கல்கத்தால் கலைந்திருந்தும் சென்னையிலுள்ளக் கனவான்களால் தடுத்திருந்தும் கூட்டத்தை மறுபடியும் கூட்டுவதாகத் தெரிகின்றது.

பெருந்தொகைகளைச் சிலவிட்டுக் கூட்டத்தைக்கூடி ஏழைகளுக்கு யாது சுகத்தை விளைவிக்கப்போகின்றார்கள். பஞ்சத்தின் பெரும் கஷ்டங்களை நீக்குவார்களோ இன்னும் கஷ்டத்துக்குள்ளாக்குவார்களோ, ஏழைகளின் கஷ்டநிஷ்டூரங்களைக் கவனிக்காத கூட்டத்தார் இருந்தென்ன போயென்ன என்னும் பெருங்கூச்சலாய் இருக்கின்றது.

வீணானக் கூட்டங்களைக்கூடி விருதாவான வார்த்தைகளைப்பேசி சுதேசிகளிலும் மிதவாத சுதேசிகள், அமிதவாத சுதேசிகளெனப் பிரிந்து இருகட்சியாகும் கலகத்தைப் பெருக்கிக் கவலையில் வாழ்வதினும் காங்கிரஸ் கூட்டமென்னும் பேச்சற்று கவலையற்றிருப்பது கனமாகும்.

- 2:18: அக்டோபர் 14, 1908 -


21. சென்னை நாஷனல் இண்டஸ்டிரியல் பண்டுக்கு தீபாவளியில் பணம் சேகரிக்கும் சங்கத்தோரும், சாதிபேதமற்ற திராவிட மகாஜன சபையோரும்

நாஷனல் பண்டு இண்டஸ்ட்டிரியல் அசோசேஷன் எனும் சங்கத்து காரியதரிசிகளால் சென்ற செப்டம்பர்மீ 24உ மூன்று அச்சுக் கடிதங்கள் விடுக்கப்பெற்றோம்.

அதன் கருத்துக்கள் யாதெனில், வருகிற தீபாவளியன்று சகலரிடத்திலும் பணம் வசூல் செய்து மேற்கண்டபடி பண்டில் சேர்த்து கைத்தொழில்களை விருத்திசெய்ய வேண்டும் என்றும் அதில் இராயப்பேட்டைக் கிளையோராக நின்று பணம் சேகரிப்பதற்கு,

ம-அ-அ-ஸ்ரீ ஜி.
நாராயண செட்டி காரு
எஸ், கஸ்தூரிரங்க ஐயங்காரவர்கள்,
பி.ஏ., பி.எல். ஏ. அரங்கசாமி ஐயங்கார்,
பி.ஏ. க, அயோத்திதாசர் அவர்கள்.
வி. திருவேங்கடாச்சாரியவர்கள், பி.ஏ., பி.எல்.

ஐவர்களை நியமித்து அதன் கருத்துகளையும் விவரித்து எமக்கெழுதியிருந்தார்கள். அக்கடிதங்களை சாதிபேதமற்ற திராவிட மஹாஜனசபையின் முக்கிய அங்கத்தோர்களுக்குக் காண்பித்ததின்பேரில் அவர்கள் அவற்றை தீர்க்க ஆலோசித்து,

இச்சங்கத்தின் உத்தியோகஸ்தருள் 14-பிராமணர்களும், 1-செட்டியாரவர்களும், 1-முதலியாரவர்களும், 1-மகமதியரவர்களும், 3-நாயுடுகாரவர்களும் இருப்பதில் பெருந்தொகையோர் பிராமணர்களாகவே இருக்கின்றார்கள். "இஃது சில நாட்சென்று செட்டியார், முதலியார், நாயுடுகாரு, மகமதியர் முதலியோர் கடந்து விடுவார்களாயின் நாஷனல் இண்டஸ்டிரியல் அசோசேஷனென்னும் பெயரிருந்தபோதிலும் பிராமணர்கள் இண்டஸ்டிரி யலாகவே முடிந்துவிடும்.

அக்காலத்தில் சகலசாதியோரையும் உள்ளுக்குப் பிரவேசிக்கவிடாமல் தடுத்து தங்கள் குலத்தோர்களையே சேர்த்து பெருந்தொகையார் சம்மதப்படி காரியாதிகளை நிறைவேற்றிக்கொள்ளுவார்கள்.

ஆதலின் நாம் பணங்களை சேகரித்து அவர்களிடம் ஒப்படைத்து சகலசாதியோருக்கும் பிரயோசனம் இல்லாமல் போமாயின் யாது பயன்.

இத்தகையக் கூட்டத்தார் அடியில் குறித்தவாறு உத்தியோகஸ்தர்களை நியமித்து காரியாதிகளை நடத்துவார்களாயின் சாதிபேதமற்ற திராவிடர்கள்