பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/137

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 89


தேன்மெழுகுவர்த்திகள் தொகை மற்றுமுள்ளத் தொகைகளையும், கட்டணங்களையும் விவரங்கண்டெழுதின் விரியுமென்றஞ்சி விடுத்துள்ளோம்.

துரைமக்கள் வீடுகளில் ஊழியஞ்செய்யும் அரண்மனை வுத்தியோ கஸ்தர்களாகுந் திராவிடர்கள் தேகசக்த்தியிலிருந்து ஊழியஞ் செய்யுமளவும் அவர்களிடத்தில் மேற்கண்டபடி தொகைகளை வசூல் செய்துக்கொண்டுவந்து அவர்கள் தேகசக்த்தி ஒடுங்கியவுடன் ஓடுகளைக் கையில் கொடுத்து பிச்சையேற்க விட்டுவிடுகிறீர்கள்.

அந்தோ! இத்திராவிடர்கள் கஷ்டத்திற்கும் நஷ்டத்திற்கும் அஞ்சாதவர்கள். கிழவன் கிழவியானபோதிலும் ஒருவரிடஞ்சென்று உதவியென்று, கேழ்க்காமல் விறகுவிற்றேனும், புல்விற்றேனும் ஓரணா சம்பாதித்து சீவிக்கும் ரோஷமுடையவர்கள். இத்தகைய ரோஷமுடையோர் உங்களை அடுத்துக் கண்டபலன் கைகளில் கப்பரையும், கழுத்தில் மணிகளுமேயானார்கள்.

துரைகள் வீட்டு உத்தியோகங்களைக் கற்றுக் கொள்ளாமல் கைத்தொழிலையேனும், வியாபாரத்தையேனும் கற்றுக்கொண்டிருப்பார்களாயின் உங்களுக்கு செலுத்தவேண்டிய தொகைகளை மரணபரியந்தஞ் செலுத்தி தங்களைப் புதைக்குங் குழிக்குந் தொகையை செலுத்திவிடுவார்கள்.

சேரிகளின் மத்தியில் ஒவ்வோர் கோவில்களைக் கட்டி எழிய பேதை மக்களின் கைப்பொருட்களை வேண்டியவரையுங் கவர்ந்து இதக்கமின்றி ஒவ்வொருவர் கைகளிலும் ஓடுகளைக் கொடுத்துவருவதுமன்றி அம்மட்டிலும் விட்டுவிடாமல் இவர்களுக்கு ஆயிரத்தி ஐந்நூறு வருடமாக சத்துருக்களாயிருந்து நசித்துவந்த சாதிபேதம் உள்ளோர்களை சேர்த்துக் கொண்டு, நீங்கள் கிறீஸ்துவக் கூட்டத்தில் சேர்ந்தபோதிலும் முதலியார் முதலியாராயிருக்கலாம், நாயகர் நாயகராயிருக்கலாம், செட்டியார் செட்டியாராயிருக்கலாம், சந்தனப்பொட்டு வைக்கவேண்டுமானால் சந்தனக்கட்டையை விஞ்சாரித்துக் கொடுத்துவிடுவோம். குங்குமப் பொட்டு வைக்க வேண்டுமானால் குங்குமம் விஞ்சாரித்துக் கொடுத்துவிடுவோம். எங்களுக்குச் சேரவேண்டிய தொகைகள் மட்டிலும் சரிவரச் சேர்த்து விட்டால் போதும் என்று உயர்த்திக்கொண்டு ஆதியில் கிறீஸ்துமதத்தை அடுத்து எங்கும் பரவச்செய்த ஏழைமக்களை எதிரிகளிடம் இதக்கமில்லாமல் காட்டிக்கொடுத்து இவர்கள் பழயக் கிறீஸ்தவர்கள் அல்ல, பறைக்கிறீஸ்தவர்கள் என்றுத் தாழ்த்தி மனங்குன்றி நாணமடையச்செய்துவிட்டீர்கள். இதுதானே உங்களை நம்பிய பலன், இதுதானே உங்களை அடுத்த பிரயோசனம், இதுதானே துக்கநிவர்த்திப் பெற்று மோட்சத்திற்குப்போகும் வழி, இது தானே. கிறீஸ்துமதப் போதகர்களின் அன்பு. இங்கிலீஷ் துரைத்தனம் இதுவரையில் இல்லாமல் இருக்குமாயின் சத்துருக்களால் முக்கால்பாகம் நசிந்து உள்ளக் கால்பாகமும் உங்களால் ஓடெடுத்துக் கொண்டே நசிந்திருப்பார்கள்.

அந்தோ! மனுக்களை ரட்சிக்க ஏற்பட்டக் கிறீஸ்துவும் அவருடைய சீஷர்களுந் தங்கள் ஞானபோதங்களை இவ்வகையாகவா பொருள் சம்பாதித்துப் போதித்தார்கள். இவ்வகையாகவா தங்கள் சுயப்பிரயோசனங்களைப் பார்த்துக் கொண்டு தங்களை அடுத்தோர்களை கண்கலங்க விட்டார்கள்.

- 2:29, டிசம்பர் 30, 1908 -

இல்லை. தங்களுக்கு இரண்டு அங்கிகளிருக்குமாயின் ஒன்றை தாரித்திரர்களுக்கும், ஏழைகளுக்குக் கொடுத்து ஆதரிக்கும்படி போதித்திருக்கின்றார்களே,

பணவாசைக்காரனும், செல்வமிகுத்தோனும் மோட்சராட்சியத்தில் பிரவேசிக்கமுடியாதென்று கூறியிருக்கின்றார்களே,

அத்தகைய சத்திய ஞானங்களைப் போதிக்குங் குருக்களாக நீங்கள் இத்தேசத்திற்கு வந்து மகாஞானிகளின் போதகத்திற்கு மாறுதலாக பணஞ்சம்பாதிக்கக்கூடிய மதக்கடைகளைப் பரப்பி இரவும் பகலும் ஓய்வின்றி