பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/198

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150 / அயோத்திதாசர் சிந்தனைகள்


பரிபக்குவத்தையுங் கேட்பார்களன்றி நீவிர் சின்ன சாதியினனா பெரிய சாதியினனாவென்று அஞ்ஞான வினாக்கள் வினவமாட்டார்கள்.

யாதுகாரணமென்பீரேல், பாலியாம் மகடபாஷையில் உபநயன மென்றும், சகடபாஷையில் கியானநேத்திரமென்றும், திராவிட பாஷையில் ஞானக்கண் உள்விழியென்றுங் கூறப்படும்.

இவற்றையே ஞான ஆசிரியர் மாணாக்கனுக்களித்து அநுபவங்கேட்பது சுவாபமாகும்.

கியானதீபம்

ஊனக்கண் அன்றென் றுளக்கண் அளித்தபின் ஞானவதுபவு முரையென்றுரைத்தது.

கைவல்யம்

அசத்திலெம்மட்டுண்டம்மட்டும் பராமுகமாகினாய்
நிசத்திலுள்விழிபார்வையிப்படி நிறத்தர பழக்கத்தால்
வசத்திலுன் மனனின்று சின்மாத்திர வடிவமாகிடின் மைந்தா
கசத்ததேகத்திலிருக்கினு மானந்தக் கடல்வடி வாவாயே.

இத்தகைய உபநயனத்தை முப்பதாவது வயதிலளிப்பது ஞான குருக்களியல்பாம் கபிலருக்கு ஏழுவயதில் ஞானவிழி திரக்க வாரம்பித்தார்கள் என்பது முதற் பொய்யாகும்.

கபிலரோ புத்ததன்மத்தைச் சார்ந்தவர். அவரிடம் ஒருவன் உலகத்தை உண்டு செய்தானென்னில் உண்டுசெய்தவன் யார், அவற்றைக் கண்டவன் யார், கண்டதை வரைந்துள்ளவன் யார் என்று வினவுவதுடன் உள்ளதினின்று உலகந்தோன்றிற்றா இல்லாததின்று உலகந் தோன்றிற்றா என்றும் வினாவுவார்.

இத்தகைய விவேகமிகுத்தோர் தான்பாடும் அகவலின் உலகத்தை நான்முகன் படைத்தானென்று கூறியுள்ளாரென்பது இரண்டாவது பொய்.

சூளாமணி

யாவனாற் படைக்கப்பட்ட துலகெலாம் யாவன் பார்த்த
தேவனால் படைக்கப்பட்ட நியாவன தகலஞ்சேர்ந்து
பூவினாற் பொறியொன்றானாள் புண்ணிய வுலகங்காண
யேபினான் யாவனம்மெய் யாவனதுலகமெல்லாம்

நான்முகனென்றும் பெயர் புத்தருக்குரிய ஆயிரநாமங்களிலொன்று.

கமலசூத்திரம்

சகஸ்திர நாம பகவன்

மணிமேகலை

ஆயிர நாமத்தாழியன் திருவடி

நன்னூல்

பூமலியசோகின் புனைநிழ லமர்ந்த / நன்முகற்றொழுது நன்கியம்புவ னெழுத்தே

தனது செயல்களையும், தன் ஒழுக்க நிலைகளையும் நன்காராய்ந்து பார்ப்போன் எத்தேச எப்பாஷைக்காரனாயினும் அவனையே பார்ப்போன் பார்ப்பானென்று கூறப்படும்.

புத்த சங்கத்திற் சேர்ந்து நீதிநெறி ஒழுக்கத்தில் நிற்கப்பார்க்கும் புருஷர்களுக்கு பார்ப்பாரென்றும், இஸ்திரீகளுக்கு பார்ப்பினிகளென்றுங் கூறப்படும்.

இவற்றையே பாலிபாஷையில் பிக்கு பிக்குணியென்றுங் கூறப்படும்.

ஒட்டியர் மிலேச்ச ரூணர் சிங்களர்
இட்டிடை சோனகர் யவனர் சீனத்தார்
பற்பல நாட்டினும் பார்ப்பா ரிலையால்

என்று தான் கூறியுள்ள நாடுகளில் பார்ப்பார்களில்லையென்று கூறியுள்ளது மூன்றாவது பொய், பௌத்தர்களால் ஆரியர்களையே மிலேச்சர்களென்று கூறியுள்ளதை மறுப்பதற்காய் தங்களைவிட வேறு மிலேச்சர்களிருப்பது போல் வரைந்தும் வைத்துக்கொண்டார்கள்.

தற்காலம் அந்தணரென்றும், பிராமணரென்றும் வேஷமிட்டுருப்போர் தங்கள் தங்கள் சுய சாதிகளுக்கும், சுயமதஸ்தர்களுக்கும் அன்னமளித்துக் கொள்ளுவது வழக்கமேயன்றி மற்றயயேழை எளியோர்களுக்குக் கொடுப்பதுங்