பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/217

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 169


தேகத்தை வருத்தி சம்பாதிப்பவர்களும், ஆகிய நன்நெஞ்சத்தை உடையவர்களே நல்லினத்தோர்களாகும்.

ஒரு பாஷையின்கண்ணே இருவினையோர் தோன்றி ஈடேற்றங்களை யழிப்பார்களாயின் அவர்களுள் தீயோரை அடக்கி ஆள்வதே அரசர்களுக்குக் அதிகஷ்டமாவது அநுபவத்திலிருக்குங்கால் பலசாதி, பலமதம், பலபாஷையுமுள்ளவர்களுக்குள்ள நல்வினைச்செயலுள்ளோர் யாவரென்றாராய்ந்து பிரதம உத்தியோகங்களில் வைக்க வேண்டியது அமைச்சர்களின் கடனாகும்.

நல்வினைச்செயலோர் இன்னாரின்னார், தீவினைச்செயலோர் இன்னாரின்னாரென்றறிந்து நல்லினத்தோர்களுக்கு இராஜகீயே பிரதம உத்தியோகங்களை அளித்து சிறப்புறச்செய்யல் வேண்டும்.

இனமறிந்தளிக்கும் எத்தனங்களினால் ஏழைகள் யாவரும் முன்னேறி கனவான்களாவதுமன்றி தீய வினங்களுக்குள்ள தீயச்செயல்களும் நாளுக்குநாளற்று நல்லினத்தோராவார்கள்.

காரணம், நல்லினத்தோர் இவர்கள், தீயினத்தோர் இவர்களென்று கண்டறிந்த வமைச்சர்கள் இராஜகீய பிரதம உத்தியோகங்களில் தீயோர்களை அகற்றி நல்லோர்களை சேர்ப்பதினால் அவற்றைக்காணுந் தீயவினத்தோர் தங்களுக்குத் தாங்களே தங்கள் தீயகுணங்களை அகற்றி நற்குணங்களைப் பின்பற்றுவார்கள்.

பெருங்காய மென்னும் ஓர் பதார்த்தத்தை எடுத்துவிட்டபோதிலும் அஃதிருந்த பாண்டத்தின் நாற்றம் விடாததுபோல் தீயோர் நல்லோரை அடுத்தபோதினும் அவர்களது தீயனாற்றம் விடாதிருப்பின் நல்லின பிரதம உத்தியோகஸ்தர்கள் மறக்கருணையாம் சொற்பக் கொடுங்கோலால் அடக்கி உள்ளக் கெட்ட நாற்றங்களாம் தீயச்செயல்களைப் போக்கிவிடுவார்கள்.

இத்தகைய குணாகுணங்களை அறிந்து பிரதம உத்தியோகங்களை அளிக்காது தீயவினத்தோர்களை பிரதம உத்தியோகங்களில் நியமிப்பதாயின் தங்களையொத்த தீயர்களுக்கே சகல சுகங்களையும் அளித்து இராஜகீய காரியாதிகளையுங் கெடுத்து இராஜகீய சுதந்திரங்களைத் தாங்களே எடுத்தாள ஆரம்பித்துக்கொள்ளுவார்கள்.

இத்தகையத் தீயச்செயலால் நல்லினத்தோர் யாவரும் நாசமடைந்து, அரசருக்கும், அமைச்சருக்கும் அல்லலுண்டாகி தீயர்கள் பெருகி தேசமும் பாழடைந்துபோம். ஆதலின் நல்லினத்தோர்களை தெரிந்தெடுத்து பிரதம உத்தியோகங்களை அளித்தாள்வதே அமைச்சர் செயலாகும்.

அங்ஙனமின்றி அமைச்சர்கள் தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்றே காலென்று கூறும் பிடிவாதம்போல் எடுத்த ஆலோசனையை முன்பின்னுணராது முடிக்க ஆரம்பிப்பார்களாயின் தன்னையும் தனதரசையுங் கெடுத்துக்கொள்ளத் தக்க அஸ்திபாரப்படையிட்டுக்கொண்டதாக முடியும்.

- 3:9; ஆகஸ்டு 11, 1909 -

தேசத்தை ஆளுவோன் அரசனாயினும் அவ்வாளுகையை முற்றும் ஆராய்ந்து நடத்துபவன் அமைச்சனேயாவன்.

ஆதலின் சுதேச மந்திரவாதச் செயல்களையும், புறதேச மந்திரவாதச்செயல்களையும் ஒரேயமைச்சன்வசம் ஒப்பி விடலாகாது.

காரணம்:- சுதேசத்துள் தனது தேசாச்சார செயலும், மதாச்சாரச் செயலும் உள்ளபடித் தெள்ளற விளங்கும். அத்தகைய விளக்கத்தால் செய்யப்படுந் தொழில்களும், தொழிலின் விருத்திகளும், வேண்டிய கருவிகளும், அதனை ஆளும் வல்லபங்களும், செங்கோலால் நடத்தும் சீருகளும், கொடுங்கோலால் அடக்கும் உபாயங்களையுங் காலமறிந்து நடத்தி அரயனுக்கு யாதாமோர் ஆயாசமுந் தோன்றாது செய்துவருவார்கள்.

புறதேசச் செயலை சீர்திருத்தும் அமைச்சன் அத்தேசத்திற் சென்று தங்களது அரசுக்குள் அடங்கிய குடிகள் யாவரும் சுகவாழ்க்கையில் இருக்கின்றார்களா, அசுகவாழ்க்கையில் இருக்கின்றார்களா, சுகவாழ்க்கையில் உள்ளவர்கள் யாவர், அசுகவாழ்க்கையில் உள்ளவர்கள் யாவரென்று ஆராய்ந்து தங்களது செங்கோலில் சிலர் சுகமுற்றுவாழ்வதும், சிலர் அசுகமுற்று வாழ்வதுமாகிய