பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/240

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192 / அயோத்திதாசர் சிந்தனைகள்


ஆலோசினைச்செய்து இப்போது சென்னை ராஜதானியிலும்), திருவாங்கூர் ராஜதானியிலும் சிறுவர்களுக்கு இலவசக்கல்வி நிறைவேறிவரும் முயற்சிக்கு மூலம் யாரென்று சென்னை மகா ஜனசபையோரை வினவிதெரிந்துகொண்டு அயோத்தி தாஸப்பண்டிதரைத்தருவித்து தனது அடையாற்றிலுள்ள கலாசாலையை எடுத்து நடத்திக்கொள்ளும் சொன்னார். அதற்குப் பண்டிதரவர்கள் தங்கள் கூட்டத்தார் எழியநிலையையும், அவர்கள் பேதத்தையும், பூர்வ சமயப்போக்கையும் விளக்கி அடையாற்றிலுள்ள கலாசாலையுடன் மற்றுஞ் சில கலாசாலைகளை வகுத்து சிறுவர்களை சீர்படுத்தவேண்டுமென்று கேட்டுக் கொண்டதின்பேரில் அமேரிக்காவினின்று கனந்தங்கிய மிஸ், சாரா.இ. பால்மரென்னும் லேடியைத் தருவித்தார். அவ்வம்மை ஆல்காட் தியாசபி சங்கத்தில் வந்திரங்கியவுடன் காரியதரிசியாரால் வாசித்த வாழ்த்துபத்திரம்.

To
Miss. SARAH.E. PALMER, F.T.S.
RESPECTED MADAM,

We come to greet you on your arrival at Madras as a committee of the Dravidian or so called Panchama Community, to contribute to whose highest welfare, you have come. Words fail us to express our gratitude for your self-denial and holy sympathy for our long oppressed and wronged race. We hope that this day will mark a new and bright epoch in our history, and you may feel assured that your name will be mentioned to our children as that of a true friend and a benefactress in ameliorating our miserable condition and reviving our old Buddhistic faith.

PUNDIT C. IYODHI DOSS.
Secretary,
12-12-98
No.7 MOBRAY'S ROAD, Royapettah,
- 3:24: நவம்பர் 24, 1909 -

கனந்தங்கிய எச்.இ. பால்மர் அம்மைக்கு வந்தனோபசார பத்திரம் வாசித்தவுடன் அவ்வம்மனும் மிக்க ஆனந்தமுடன் எழுந்து திராவிட சாக்கைய பௌத்தசங்கத்தோரை நோக்கி சகோதரர்களே நீங்கள் கோரியவிண்ணப்பம் ஏழை, என்னாற் கூடியக் கல்விவிருத்தி செய்துவைப்பேனென்று வாக்களித்தார்கள்.

அவ்வாக்கு பிசகாது பண்டிதரை அழைத்து வேளாளத் தேனாம் பேட்டையிலும், மற்றுமுள்ள இடங்களிலிருக்கும் சாதிபேதமற்ற திராவிடர்களை அழைத்து கலாசாலை அமைக்கும் விஷயங்களை எடுத்தோதும்படிச் செய்து அங்கோர் கலாசாலையும், மயிலாப்பூரில் ஓர் கலாசாலையும், கோடம்பாக்கத்தில் ஓர் கலாசாலையும் நிலைக்கச்செய்தார்கள்.

அம்மூன்று நூதன கலா சாலைகளின் கட்டிடங்களை சொந்தமாகவே கட்டி முடித்ததுமன்றி வாசிக்கும் பிள்ளைகளுக்கு சம்பளமில்லாமற் கற்பிப்பதுடன் நான்காவது வகுப்புப் பிள்ளைகள் வரையில் வாசிக்கக்கூடிய புத்தகங்களும், கடிதங்களும், சிலேட்டுகளும், பென்சல்களும் (கிண்டர்காட்டன்வர்க் கென்னும்) சித்திர வேலைகள் செய்யும் சாபyான்களும் இலவசமா கக்கொடுத்துக் கற்பித்து வந்தார்கள்.

அத்தகைய கற்பனா உபகாரம் போதாது மத்தியானத்தில் பொசிப்பில்லா ஏழை சிறுவர்களுக்கு சிறுதிண்டியாம் புசிப்புமளித்துவருவதுடன் அம்மை பால்மர் துரைசானியிருக்குமளவும் ஏழை சிறு பிள்ளைகளுக்கு வேண்டிய உடைகளுந் தைத்து உடுத்திவந்தார்கள்.

கர்னல் ஆல்காட் துரையவர்களின் கருணையாலும், அவரை அடுத்தோரின் பேருபகாரத்தாலும் கலாசாலை சம்பளமின்றி மேற்கூறிய உபகாரம் பெற்று வாசித்துவரும் பிள்ளைகளின் தொகை 700-க்கு மேலதாகும்.