பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 215

மற்றும் ஐரோப்பியர்களே துணைக் கருவிகளாயிருந்து கார்த்துவருவது பிரத்தியட்ச அநுபவமாகும்.

இவைகள் யாவற்றையும் நம்தேயத்தோர் சீர்தூக்கி ஆலோசியாமல் வியாபாரத் துவக்கும் போதே விவகார வியாபாரந் தொடர்வதினால் சகல கையொப்ப நேயர்களும் சந்தேகத்திலாழ்ந்து சேராமல் விலகிவிடுகின்றார்கள்.

வியாபார விருத்தியை நாடுவோர் சுதேசியென்றும், பரதேசியென்றும் பாரபட்சம் பாராது சுதேசி கம்பெனி, பரதேசி கம்பெனி யென்னும் பிரிவினை செய்யாமலும், அந்த வியாபாரங்களுக்குத்தக்கப் பெயர்களைக் கொடுத்து பெருங் கம்பெனிகளாயின் அதற்கு ஒவ்வோர் ஐரோப்பிய நிபுணர்களையே தலைவர்களாக வைத்து சமரச சிந்தையில் வியாபாரத்தை நடத்துவதானால் சகல சாதியோருங் களங்கமின்றி சேர்ந்து அனந்த ஷேர்களுமெடுத்து கம்பெனியை விருத்தி செய்வார்கள். சேர்ந்தவர்களும் லாபம் பெறுவார்கள். தேசமும் சிறப்படையும் குடிகளும் சீர்பெறுவார்களென்பது சத்தியம்.

- 3:27; டிசம்பர் 15, 1909 -


99. இராஜவிசுவாசிகளுக்கும் மிதவாதிகளுக்கும் கேட்டசுகம் கிடைக்காமற் போமோ

எவ்விதத்துங் கிடைக்கும். ஆனால் இராஜதுரோகிகளுக்கும், அமிதவாதிகளுக்குங் கிடைக்காதென்பது திண்ணம்.

எவ்வகையிலென்பீரேல் அவனவன் அளந்தபடி அவனவனுக்கு அளக்கப்படும் என்றும், அவனவன் செய்தவினையை அவனவன் அனுபவிப்பான் என்பதுந் தரும் சாஸ்திர துணிபு. ஆனால் தருமசாஸ்திரங்களைப் பாராமலும், தரும் விதியின்படி நடவாமலும், அதன்மசாஸ்திரங்களை வாசித்து அதன்ம நடையில் நடந்து பொதுநலங் கருதாது சுயநலங் கருதுவோருக்கு நீதிநெறி அமைந்த ராஜாங்கம் விரோதமாகவே தோன்றும். மிதவாதமாம் நியாய நிலையிலிருக்குங் குடிகள் மிகுவிரோதிகளாகவே விளங்குவார்கள். அதினால் இராஜவிசுவாசிகளை இராஜதுரோகிகள் ஏசுவதும், மிதவாதிகளை அமிதவாதிகள் தூற்றுவதும் சுவாபமாகும். அத்தகைய இராஜதுரோகிகள் ஏசுதலுக்கும், அமிதவாதிகள் நூற்றுதலுக்கும் அஞ்சாது நீதியிலும், நெறியிலும் நடப்பதே சுகந்தரும்.

குடிகளிடத்து எவ்வளவு ஆறுதலும் அமைதலுமிருக்கின்றதோ அரசும் அன்னிலையில் நிற்கும். குடிகளிடத்து சீர்கேடும், கோபாவேஷமும் விளங்குமாயின் அவர்களை அடக்குமாறு செங்கோலை அடக்கி கொடுங்கோலை நடத்த நேரிடும். அக்கொடுங்கோல் தண்டனையை அநுபவிப்போரும் அவருற்றார் பெற்றோரும் அன்னோரையொற்ற ராஜ விரோதிகளும் நீதிநெறி அமைந்த ராஜாங்கத்தை நிந்திப்பதில் யாதுபயன்.

ஓர் குடும்பத்திலுள்ள பிள்ளை தனது அறிவில்லாக் குறையால் ஓர் குற்றஞ் செய்து விடுவானாயின் அக்குடும்பத்தோர் அவனை தெண்டித்தும், பயமுறுத்தியங் கெட்டச்செயலை நீக்கும்படிச் செய்வார்களாயின் அக்குடும்பத்தோருக்கு புகழுங் கீர்த்தியுமுண்டாகும். அங்ஙனஞ் சிறுவன் குற்றத்தைக் கண்டியாது இன்னும் அவனுக்கு உச்சாகம் உண்டாகத்தக்கப் போதனைகளையும் பொருளுதவியையுஞ் செய்வார்களாயின் அவன் சீர்கேடடைவதுடன் அவனது குடும்பமும் சீர்கெடுமென்பது திண்ணம். ஓர் குடும்பத்திற்கு நேரிட்ட பலனே ஓர் கிராமவாசிகளுக்கும் நேரிடும். ஓர் கிராமவாசிகளுக்கு நேரிட்ட பலனே ஓர்தேசவாசிகளுக்கும் நேரிடுமென்பது சொல்லாமல் அமையும்.

தேசத்திலுள்ள இராஜதுரோகிகளையும், அமிதவாதிகளையும் அத்தேசக் குடிகளேயடக்கி அறிவைப்புகட்டாது வாக்குறுதியும், பொருளுதவியுஞ் செய்து வருவார்களாயின் அவர்களுக்குண்டாகுங் கேட்டினது பாகம் இவர்களுக்கும் உண்டாகுமென்பது துணிபு.