பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 223


105. பி.ஏ. எம்.ஏ. முதலிய பட்டம் பெற்றவர்களுக்குத்தான் கவுன்சலர் மெம்பர் ஸ்தானம் அளிக்க வேண்டுமோ

பி.ஏ.எம்.ஏ. என்னுங் கல்வியானது ஓர்குணிப்பில் அடங்கியது. அவரவர்களின் சுயபாஷாகல்வி விருத்தியானது விவகார விருத்தியை எவ்வகையானும் அறியச்செய்யுமேயன்றி விழலாகாது. ஈதன்றி சுய பாஷையுடன் ஆங்கிலபாஷையும் நன்கு எழுதப்படிக்கக் கற்றுக் கொள்ளுவார்களாயின் உலகவிவகாரங்களை இன்னும் விளங்க சீர்திருத்துவார்கள். இஃது அநுபவப் பிரத்தியட்சமாகும்.

எவ்வகையிலென்பீரேல், பி.ஏ. எம்.ஏ. முதலிய கெளரதாபட்டங்களும் இன்ன பரிட்சையில் தேர்ந்தவர்களுக்கே இன்ன உத்தியோகங்கொடுக்கபடுமென்றும் நிபந்தனைகள் இல்லாதகாலத்தில் சொற்பக் கல்வியைக் கொண்டு நடாத்தி வந்த நியாயாதி நிலைகளும், விவகார நிலைகளும் சீர்திருத்த நிலைகளும் எவ்வளவோ சுகமாகி நிறைவேறிவந்ததை பூர்வநிலை கட்டுகளால் அறிந்துக்கொள்ளலாம்.

இவற்றுள் ஆஸ்பிட்டல் அசிஸ்டென்டுகளை முதலாவது எடுத்துக் கொள்ளுவோம். பிரிட்டிஷ் துரைத்தனம் நிலைத்து தரும் வைத்தியசாலைகளை வகுத்து ஆஸ்பிட்டல் அசிஸ்டென்டுகளை நியமித்த போது அவர்கள் யாவரும் பி.ஏ. எம்.ஏ. பட்டமின்றி எழுதவும் படிக்கவுங் கூடியவர்களாய் இருந்தபோதிலும் தேகலட்சணங்களையும் வியாதிகளின் பாகுபாடுகளையும், மருந்துகளின் குணாகுணங்களையும் நன்காராய்ந்து வியாதியஸ்தர்களை வைத்தியசாலைகளில் அன்புடனாதரித்து சுகப்படுத்தி வேண்டிய கீர்த்திகளும் நற்சாட்சி பத்திரங்களும், உபகாரச் சம்பளமும் பெற்று சுகித்திருக்கின்றார்கள்.

ஆனால் அவர்கள் செய்துவந்த வைத்திய சிகிட்சையோ காடுகளிலும், மலைகளிலும் சுற்றி மியூட்டினிகளிலும், யுத்தகளங்களிலும் நின்று செய்து அனந்தங் கீர்த்திப் பெற்றிருக்கின்றார்கள். இத்தகையக் கீர்த்திப் பெற்றவர்கள் யாதொரு கல்வியின் பட்டப்பெயரில்லாமல் இராஜவிசுவாசத்தினாலும், வியாதியஸ்தர் மீது அன்புபாராட்டி அதி பக்தியுடன் செய்துவந்த சிகிட்சையினாலுமே பெற்றார்கள்.

பி.ஏ, எம்.ஏ. முதலிய கெளரதாபட்டம் பெறாத நியாயாதிபதிகளும், சாட்சிகளின் வார்த்தைகளையே முக்கியமாக நம்பிக் கொள்ளாமல் தாங்கள் கேழ்க்குங் கேழ்விகளினால் மெய் பொய்யறிந்து சகலரும் மெச்சத்தக்க தீர்ப்புகளளித்திருக்கின்றார்கள்.

அதாவது, 50-வருடங்களுக்கு முன்பு நடந்த ஓர் சிவில் வியாஜ்ஜியத்தில் ஒரு வஞ்சகன் மற்றோர் கைம்பெண்ணிடம் பணமிருப்பதறிந்து யாருமற்ற ஓர் மரத்தடியிற் கொண்டுபோய் நிறுத்தி தனக்கு பத்து ரூபாய் கடன் கொடுக்கும்படிக் கேட்டுப் பெற்றுக்கொண்டு சிலகால் சென்றபின் நான் வாங்கவில்லையென்று மறுதலித்து விட்டான். கைம்பெண்ணானவள் துக்கித்து அதிகாரிகளிடம் பிரையாது கொடுத்துவிட்டாள். வாதியும், பிரதிவாதியும் கோர்ட்டில் நின்றபோது நியாயாதிபதி கைம்பெண்ணைநோக்கி பிரதிவாதிக்கு நீர்பணங்கொடுக்கும் போது யாராவது பார்த்ததுண்டாவென்றார், யாரும் பார்க்கவில்லையென்றாள். மற்றும் அப்பணத்தை எங்கு நின்று கொடுத்தாய் என்றார், ஓர் மரத்தடியில் நின்று கொடுத்தேனென்றாள். அம்மரமேனும் பார்த்திருக்குமே என்றார், ஆம் பார்த்திருக்குமென்றாள். ஆனால் அம்மரத்தின் இலையோடுகூடிய ஓர் சிறு கிளையை ஒடித்துவாவென்று உத்திரவளித்தார்.

உடனே கைம்பெண்ணானவள் கோர்ட்டை விட்டிரங்கி 100-கெஜ தூரம் போகும்வரையில் நீதிபதி வேறு கியாபகங்காட்டி பிரதிவாதியை நோக்கி உன்மீது பிரையாது கொடுத்துள்ள வாதியானவள் அம்மரத்தடியில் சென்றிருப்பாளா வென்றார், அதைக்கேட்ட பிரதிவாதி அம்மரம் வெகு தூரத்திலிருக்கின்றது இன்னும் போய் சேரமாட்டாளென்றான். இவனது வார்த்தையைக் கொண்டே கைம்பெண் பணத்தை வாங்கிக்கொண்டு மோசஞ்