பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 261

யாவும் வம்பாபிஷேகமென்றே விளங்குகின்றபடியால் இதன் சமயயுக்தங்களை சரிவர ஆராய்ச்சிச் செய்யவேண்டியதே அத்தியந்த கடனாம்.

அதாவது சுதேசிகள் சுதேசிகளென வெளிதோன்றி சகலரையுஞ் சேர்த்துக் கொண்டு தங்கள் சுயகாரிய சித்திப் பெறவேண்டுமென்போர் கருத்து வீணாகிவிட்டபடியால் ஆரிய சமாஜமென்று ஒன்றை ஏற்படுத்தி சகலசாதியோரையும் சகல மதத்தோரையும் பிராயச்சித்தஞ்செய்து சேர்த்துக் கொள்ளும் யீதோர் பிரியசித்தம்போலும். இத்தகைய பிரியசித்தமுள்ளார்வசம் கிறீஸ்தவர்களும் மற்றவர்களும் சேர்ந்துக்கொள்ளுவது யாது பயன் கருதியோ விளங்கவில்லை.

கிறீஸ்தவ சோதிரர்களே, கிறீஸ்துவென்னும் ஒருவர் பிறந்தார், வளர்ந்தார் அனந்த நீதிகளைப் போதித்தாரென்பது சரித்திராதாரமுண்டு. அதுபோல் ஆரியரென்பவர் ஒருவர் பிறந்தாரா வளர்ந்தாரா ஏதேனும் நீதிகளைப் போதித்தாரா, சரித்திர முண்டா உசாவுங்கள் தேற உசாவிச்சேருங்கள், சேருங்கள்.

- 3:52; சூன் 8, 1910 -


139. பிரோடெஸ்டென்ட்பாதிரிகள் மீது குறைகூறுவது பெரும்பாவமேயாம்

தேசசீர்திருத்தங்களுக்கென்று வெளிதோன்றியுள்ள சில பத்திரிகைகள் தேசசீர்திருத்தம் யாதென்பதை நோக்காது மிஷநெரி பாதிரிகள் கலாசாலைகளை வகுத்து அனந்தம்பேர்களை கிறிஸ்தவர்களாக்கி விட்டதுமன்றி போதாக்குறைக்கு கைத்தொழிற்சாலைகளையும் அமைத்து உள்ளவர்களையும் கிறிஸ்தவர்களாக்கிவிடுகிறார்களென்று மிக்க மனத்தாங்கலாய் எழுதியிருக்கின்றார்கள். அவ்வகையாகக் கிறிஸ்தவர்களாகுகின்றவர்கள் பஞ்சமர்களே என்றும் பரிந்தும் எழுதியிருக்கின்றார்கள். யதார்த்தத்தில் அன்னோர் பத்திரிக்கைகள் சீர்திருத்தத்திற்காய்த் தோன்றியிருக்குமாயின் இத்தகைப் பொறாமெய் குணத்தை வெளியிட மாட்டார்கள். தங்கள் சுயப்பிரயோசனத்திற்காய் பத்திரிகைகளை வெளியிட்டுள்ளவர்களாதலின் பஞ்சமரென்போர் கல்வியும் கைத்தொழிலும் கற்று சீர்பெறுவது அன்னோர் கண்களுக்கும் மனதிற்குஞ் சகியாது பொறாமெய்க் கடிதங்களை வெளியிட்டிருக்கின்றார்கள்.

மிஷநெரி துரைமக்கள் வந்து தோன்றி கலாசாலைகளை வகுத்து சீர்திருத்தியதினால் சகலசாதியோருங் கல்விகற்று சீருஞ்சிறப்பும் பெற்று தேசங் கலையுற்று வருவது பிரத்தியட்ச அநுபவமாகும். அதற்காதாரவாக கைத்தொழிற் சாலைகளையும் வகுத்துக் கார்ப்பரேல் மேலுமேலும் குடிகள் சோம்பலற்று சுறுசுறுப்புற்று கைத்தொழில் கற்று கனவான்களாகி இன்னும் தேசம் சிறப்பு பெறும் என்பது சொல்லாமல் அமையும். பத்திராதிபர்களுக்குக் கைத்தொழிற்சாலைகளமைப்பது கனமென்று தெரிந்திருந்தபோதினும் பஞ்சமர்கள் என்போர் சுகம்பெறுவது சகிக்காமலே இத்தகையக் கடிதங்களை வரைந்துவருகின்றார்கள். ஏழைக் குடிகள்மீது இம்மஃபய் வஞ்சினமும் பொறாமெடியும் வைத்துள்ளவர்கள் ஏழைக்குடிகளை ஈடேற்றுதற்குக் கூட்டங்கள் கூ.டி.வருகிறார்களென்றும் ஆரியசமாஜத்தில் சேர்த்துக்கொள்ளுகிறார்கள் என்றும் கூறுவது காரியக் கூற்றென்றே கூறலாகும்.

அதற்குப் பகரமாய் சாதிகளை நாட்டுவதற்கும் ஒட்டுவதற்கும் இந்து மதத்தோரென்னும் கூட்டத்தோரே காரணர் அன்றி தற்காலத் தோன்றியுள்ள ஆரியசமாஜத்தோர் காரணராகார்கள். கனந்தங்கிய மிஷநெரி துரைமக்கள் செய்துவரும் சுகசீர்களைக் கண்டு பொறுக்காதவர்கள் ஆரியசமாஜத்தோர் செயலை யங்கிகரிப்பரோ. இவ்விருவர் ஒற்றுமெக்கேட்டை உணராத ஏழைக்குடிகள் இரண்டாட்டுக்குட்டி போல் உள்ள மதத்தையும்விட்டு நாக்கைச் சுட்டு காயத்திரி படித்து நடுத்தெருவில் நிற்பதினும் தங்களுக்குத் தங்களை சீர்திருத்தி தாங்களே முன்னேறும் வழியை தேடுவது சிறப்பைத்தரும்.

இந்திய மக்களுக்கு மிஷநெரி துரைமக்கள் செய்துவைத்துள்ள கல்விக்கும் நாகரீகத்திற்கும் சிறப்பிற்கும் இந்தியர்கள் செய்த கைம்மாறென்னை. அவர்கள்