பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/594

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

546 / அயோத்திதாசர் சிந்தனைகள்


திருக்கலம்பகம்

ஒதாதுலகிற் பொருளனைத்துமுடனே / யுணர்ந்தா னுணர்ந்தவற்றை
வேதாகமங்களா றேழால் / விரித்தான் விமலன் விரித்தனவே
கோதார் நெஞ்சத்தவர் பிறழக் / கொண்டேதாமே கண்டார்போற்
பேதா, பேதம், பேதமெனப் / பிணங்கா நின்றார் பிரமித்தே.

மணிமேகலை

சுருதி சிந்தனாபாவனா தெரிசனை.

திருக்கலம்பகம்

போற்றுமிதுவென்கொல் பொய்ந்நூல்களைப் புலவீர்
சாற்றுமனந்த சதுட்டயத்தா - னேற்றுத்
துளக்கப்படாத சுருதியாலல்லா
வளக்கப்படுமோ வறம்.

பாபஞ் செய்யாமல் இருங்கோள் என்பது ஓர்வகையும், நன்மெய்க் கடைபிடியுங்கள் என்பது ஓர் வகையும், இதயத்தை சுத்தி செய்யுங்கள் என்பது ஓர் வகையுமாக மூன்றுவகை வாக்கியங்களானது கொண்டு மூன்று பேர் வாக்கியங்கள் என்றும், திரிவேதவாக்கியங்கள் என்றும் வழங்கலாயிற்று.

இவ்வாக்கியங்களை ஒருவர் போதிக்கவும் மற்றவர் கேட்டுக் கொள்ளும் சுருதி வாக்கியங்களாய் இருந்தபடியால் அவைகள் மறதிக்கு வந்து விடும் என்று எண்ணிய அவலோகிதராம் புத்தபிரான் வடமொழியென வழங்கும் சகடபாஷையையியற்றி பாணினியார் வசமும், தென்மொழி என வழங்கும் திராவிடபாஷையை இயற்றி அகஸ்தியர் வசமும் அளித்து சுருதி வாக்கியங்கள் என்னும் திரிபேதவாக்கியங்களையும் அதன் பிரிவுகளாம் அதனதன் அந்தரார்த்த விரிவுகளையும் வரிவடிவாம் அட்சரங்களில் பதிவுபடப் பரவச் செய்தார்.

- 2:12; செப்டம்பர் 2, 1908 -

வீரசோழியம் பதிப்புரை

வடமொழியை பாணினுக்கு வகுத்தருளியதற்கிணையாய்
தொடர்புடைய தென்மொழியை யுலகமெலாந் தொழுதேத்த
கு முநிக்கு வற்புறுத்தார் கொல்லேற்று பாகர்.

வீரசோழியம்

மதத்திற் பொலியும் வடசொற் கிடப்புந்தமிழ்மரபும்
முதத்திற் பொவியேழை சொற்களின் குற்றமு மோங்குவினைப்
பதத்திற் சிதைவு மறிந்தே முடிக்கப்பன்னூறாயிரம்
விதத்திற்பொலியும் புகழவலோகிதன் மெய்த்தமிழே.
ஆயுங் குணத்தவ லோகிதன்பக்க வகத்தியன்கேட்
டேயும் புவனிக்கியம்பிய தண்டமி ழீங்குரைக்க
நீயு முனையோ வெனிற் கருடன்சென்ற நீள்விசும்பி
லீயும்பறக்கு மிதற்கென்கொலோ சொல்லு மேந்திழையே.

சிலப்பதிகாரம்

தண்டமிழாரான் சாத்தன்ஃதுரைக்கும்

சகல இலக்கணங்களிலும் சாற்றுதற்குரிய சாத்தன் வந்தான் சாத்தன் சென்றான் என்னும் இலக்கண உதாரண வாக்கியங்களைக் காணலாம்.

வீரசோழிய பதிப்புரை

இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குரவ ரியல்லாய்ப்ப
இருமொழியும் வழிபடுத்தார் முநிவேந்த ரிசைபரப்பும்
இருமொழியு மான்றவரே தழீஇனா ரென்றாலிங்
கிருமொழியு நிகரென்னுமிதற்கைய முனதேயோ

சகடபாஷையாம் சமஸ்கிருதத்தையும், திராவிடபாஷையாந் தமிழையும், புத்தபிரான் இயற்றி பாணினியார் வசமும் அகஸ்தியர் வசமும் அளித்து திரிபீடவாக்கியம், திரிபேத வாக்கியம் என வழங்கிவந்த சுருதிவாக்கியங்களாம் ஒலிவடிவை வரிவடிவில் பதிந்து சகலர் மனதிலும் பதியச்செய்து ஞான பாகையாம் இதய சுத்தத்தால் மெய்யறம், மெய்ப்பொருள், மெய்யின்பந் தோன்றி பரிநிருவாணமுறும் நிலையை நான்காவது மறைமொழியாகக் கொண்ட நான்கு மறைமொழி என்றும், நான்கு வேதவாக்கியங்கள் என்றும் வழங்கலாயினர்.