பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/607

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம் / 559


இதயசுத்தத்தாலும், வேதாந்தமாம் உபநயன பார்வையாலும், காமனையும் வென்று மரணத்தை ஜெயித்து அறஹத்து, பிராமணர், அந்தணரென்னும் பெயர்பெற்று புளியம்பழம் போலும், ஓடுபோலும் தேகத்தினின்று மறுபிறப்படைகின்றவர்க ளெவரோ அவர்களே இருபிறப்பாளரென்னும் யதார்த்த பிராமண வேதாந்திகளாவர்.

இத்தியாதி சத்தியதன்மங்களையும் தெள்ளற விளக்கி உலக சீர்திருத்தத்திற்கு ஆதியாகவும் மக்களின் தெய்வத்தோற்றத்திற்கு ஆதியாகவும் மனவமைதியால் மரணத்தை ஜெயிக்கும் மார்க்கத்திற் காதியாகவும் சாந்த நிலையமைதியால் அந்தணர்களென்று பெயர்பெற்றவர்களுக்கு ஆதியாகவும் நல்லொழுக்கத்தில் உண்டாகும் சகல சித்துக்களினுட்பொருட் ஆதியாகவும் விளங்கி ஆதிதேவனென்றும், ஆதிகடவுளென்றும் ஆதிவேதமென்றும், ஆதிநாதனென்றும் ஆதிபிரமமென்றும், பெயர்பெற்றவர் ஜெகத்குருவாம் புத்த பிரானேயாகும்.

சக்கிரவர்த்தித் திருமகனாகும் சாக்கையமுனிவர் உலகெங்குஞ் சுற்றி பேரானந்த சத்திய தன்மத்தை ஊட்டி சீர்திருத்தியுமிருக்கின்றார்.

மணிமேகலை

எண்ணருஞ் சக்கரவான மெங்கணும் / அண்ணறைக் கதிர் விரிக்குங்காலை.

சிலப்பதிகாரம்

விரிகதிர்பரப்பி யுலகமுழுதாண்ட / வொருதனித் திகிரி யுரவோற்காணேன்.

சூளாமணி

தெருளாமெயால் வினவற்பாலதொன்றுண்டு
திருவடிகள் செம்பொனாரற சாரறறிந்தமேந்த
விருளாழிளேழுலகுஞ் சூழொளியின்மூழ்க
விமையாமதசெங்கண்ணி மொளிமணி னிமையோர் வந்தேத்த
வுருவாழியானு அழியாது. மொ மணி முடி மேற்குகைவைத்
தொருபாலில் வரவுலக நின்னுழையாதாக
வருளாழி முன்செல்லப்பின் செவ்வதென்னோ
வடிபடாதாய் ஈதாய் நின்ற வகன்ஞால முண்டோ

பின்கலை நிகண்டு

உலகெலா மிறைஞ்சி யேத்த / வுலகெலா முணர்ந்தமூர்த்தி

இவ்வகையாய் புத்தபிரான் உலகெங்குஞ் சுற்றி சத்தியதன்மத்தை மக்களுக்கு விளக்கினாரென்னும் சரித்திராதாரங்களுள்ளதன்றி அவரது நிஷ்டாசாதன உருவத்தைக் காட்டுஞ் சிலைகளும், அவர் சின்முத்திரை முதலிய பதினாறு முத்திரைகளைக் காட்டிய உருவச்சிலைகளும், நிருவாணமடைந்த அறப்பள்ளி உருவம் போன்ற சிலைகளும், உலகெங்குங் காணப்படுவதை அந்தந்த தேச மீயூஜியங்களிலும், ஆர்ச்சலாஜிகல் சர்வே புத்தகங்களாலும் தெரிந்துக் கொள்ளலாம்.

இருப்பிறப்பாளராகிய அந்தணர்கள் யாவருக்குத் தந்தையும் ஆதி அந்தணருமாக விளங்கிய வரும் புத்தபிரானேயாம்.

திரிக்குறள்

அறவாழியந்தணன்றாள் சேர்ந்தார்கல்லார் / பிறவாழி நீந்தலரிது.

சீவகசிந்தாமணி

திருமறுமார்பினை திலகமுக் குடையினை / யருமறை தாங்கிய வந்தணர் தாதையை
யருமறை தாங்கிய வந்தணர் தாதைதின் / னெரிபுரை மரைமல ரிணையடி தொழுதும்.

சாதிப்பைம் பொன்றன் னொளிவெனவித்தகைகுன்றா
நீதிச்செல்வம் மேன்மேணீந்தி நிறைவெய்தி
போதிச்செல்வம் பூண்டவரேத்தும் பொலிவின்னால்
ஆதிக்காலத் தந்தணன் காதன் மகனொத்தான்.

சருவ உயிர்களையும் தன்னுயிர்போல் கார்த்து சாந்தனிறைவால் ஆதியந்தணராகவும், அந்தணர்களுக்குத் தாதையாய துமன்றி உலக சீர்திருத்தக்காரருள் ஆதியாக விளங்கினவரும் புத்தபிரானோம்.