பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/614

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

566/அயோத்திதாசர் சிந்தனைகள்


இவ்வகைப் புறதேசஞ்சென்றும் தான் செய்துவந்த கொலைக்குற்றத்தைப் பெருந்தீவினை என்று எண்ணித் திரிந்தவராதலின் அவர் பயந்துலாவிய மலையில் கொலைச்செய்யா திருப்பாயாக என்னும் கட்டளையே அவருக்குக் கிடைக்கப்பட்டது.

அக்கட்டளையைக் கண்டவுடன் மென்மேலும் அச்சந்தோன்றி நன்மார்க்கத்தைக் கடைபிடித்தார்.

அவற்றுள் பெரும்பாலும் இத்தேசத்தார் சத்திய தன்மத்தைப் பின்பற்றி மாதா, பிதா, குரு இம்மூவரையும் தெய்வம் எனத் துதித்து அவர்களைக் கனஞ்செய்து வந்தவர்களாதலின் மோசேயுந் தனது குருவை தெய்வமெனத் தொண்டு பூண்டு அவர் போதித்த சத்தியதன்மத்தினின்று ஞானத்தெளிவுண்டாகி லாமா என்னும் புத்தகுருவாகவும் விளங்கினார்.

எத்தேசத்தோருக்கு குருவாகினாரென்னில்

மோசே எகிபேத்தியனாயிருந்தபோதிலும், தீபேத்தியனா இருந்த போதிலும் பெரும்பாலும் இவர் வாசம் சீனபருவதமாகவே விளங்குகிறபடியால் வடநாட்டாரால் சீனர்கள் என்றும், இசரேலர்கள் என்றும் தென்னாட்டாரால் நாகர்குலத்தொரென்றும், பெருகி பலுகும் ஆசீர்பெற்ற கூட்டத்தாருக்கே குருவாக விளங்கினார்.

லாமாவென்னும் பெயரால் மோசேயை அழைக்கப்பெற்ற விவரம்

நாளது வரையில் தீபேத்தில் வாசஞ்செய்யும் புத்தகுருக்களை லாமா, லாமா என்று வழங்கிவருவது சகலசரித்திரக்காரர்களும் அறிந்த விஷயமே.

அவ்வகைப் பெயரைக்கொண்டே முன்னனுபவங்களை நோக்குங்கால், சோதிரூபமுள்ள மோசே, எலியா, கிறீஸ்து இம்மூவரும் சீனபருவதத்திற் கிறீஸ்துவின் பாட்டைப்பற்றி பேசியபின்னர் கிறிஸ்துவிற்கு சிலுவையில் அறையுண்ணும் பாடுநேர்ந்தது. அப்பாடுபடுங்காலத்தில் மோசேயை லாமா என்றும், எலியாவை ஏலி என்றும் அழைப்பதற்காய் ஏலி, ஏலி லாமா சபக்தானியென்றழைத்தவுடன் அடங்கிவிட்டார்.

அந்த சப்தத்தைக் கேட்ட அப்பாஷைக்குரியோனும் எலியாவை அழைக்கின்றார் அவர் வருகின்றாரோ பார்ப்போமென்றும் கூறியுள்ளான்.

இத்தகைய அநுபவ ஆதாரங்களால் லாமா என்னும் மொழியானது புத்தகுருக்களுக்கே பொருந்தும் என்பது திண்ணமாம்.

அதாவது ஏனோக், எலியாவென்ற இருபெரியோரும் விதேகமுத்திப் பெற்றவர்கள். மோசேயோவெனில் ஜீவன்முத்தி பெறுவர். இவற்றுள் தேகத்தை சுமந்து திரிவது பயனில்லை என்று வெறுத்து புளியம்பழம் போலும் ஓடுபோலும் சுயம்பிரகாச உருவைப் பிரித்துக் கொள்ளுதல் ஜீவன்முத்தியாகும் தேகத்தைக் காற்றுடன் காற்றாக மறைக்கவும், நீருடன் நீராக மறைக்கவும், மண்ணுடன் மண்ணாக மறைக்கவும் கூடிய சித்திபெற்று சாரணர்களாகி அந்தரத்துலாவுதல் விதேகமுத்தியாகும் இவ்விருவகை முத்திச் சுகமும் ஒன்றேயாம்.

இத்தகைய சித்திமுத்தி நிலையில் மோசேயும், எலியாவும் கிறீஸ்துவுடன் கலந்து பேசிச்சென்ற சொற்பதினத்தில் அவருக்குப் பாடுநேர்ந்ததும் அக்காலத்தில் இவ்விருவரையும் அவர் அழைத்ததும் அவர் பாஷைக்குரியவர் வாக்கால் தெள்ளற விளங்குகிறபடியால் ஏலிஏலி லாமா சபக்தானி என்னும் சிறந்தவாக்கியத்தினால் புத்தகுருவாக விளங்கிய லாமா என்னும் மோசேயையும் அவர் ஒழுக்கத்தைப் பின்பற்றி ஒழுகிய எலியாவையும் அழைத்தவிவரமும் அவ்வார்தையொலித்தப்பின் சீனபருவத்தில் பேசிய அந்தர அங்கவொடுக்கப் பலனேயாம்.

- 2:25; டிசம்ப ர் 2, 1908 -

மோசே இருபிறப்படைந்த சார்பு

மோசே என்பவர் பாபத்தின் சம்பளமாகும் மரணத்தை ஜெயித்து நித்தியசீவனைப் பெற்று இருபிறப்பாளனாகி உலாவுவதற்கு ஆதாரம் யாதென்பீரேல்:-