பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/631

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம் /583

அளிக்கப்பட்டிருக்கின்றது.

அத்தகைய ஆதாரங்களைப் பெற்றுள்ள மக்களோவெனில் புல்லையும், கொள்ளையும் முன்னிலையில் பெற்றுள்ள விலங்குகளுக்கு ஒப்பாய் நோய்கொண்டும், கபமீண்டும், பாபத்தின் சம்பளமாகும் மரணத்திற்கு ஆளாகின்றோம்.

அதனினும் விலங்குகளேனும் சுகசீவிகளாக உலாவி நீடித்த ஆயுளுடனிருப்பதைக் காண்கின்றோம்.

வேதத்தை ஓதுகின்றவன் என்றும், குருபட்டம் பெற்றவன் என்றும், ஞானதீட்சை பெற்றவன் என்றும், ஞானஸ்தானம் பெற்றவன் என்றும் குட்டி வேதாந்திகளல்ல பெரிய பெரிய வேதாந்திகள் என்றும், பெயர் பெற்ற மக்களோ நல்ல பாலியத்தில் கபமடைத்து செத்தான், கண்ணிருண்டு செத்தான், வாய்குழைந்து செத்தான், மெய்மறந்து செத்தான் என்று சொல்லும் மொழியைக் கேட்கின்றோம்.

அநுபவக் காட்சியால் மக்களினும் விலங்குகளே மேலாக விளங்குகின்றது.

பூர்வகாலத்தில் சத்தியதன்மத்தினின்று ஞானஸ்தானமாம் அறிவிநிலை அடைந்த மக்கள் சருவ விஷசெந்துக்களையும், கொடிய விலங்குகளையும் தங்கள் ஏவல்களுக்கடக்கியும், தங்களுடன் உலாவியும் இருந்ததாக ஞானநூற்கள் கூறுகின்றன.

தாயுமானவர்

கானகமிலங்கு புலிபசுவொடு குலவ நின் / கண்காண மதயானையுங்
கைகாட்டவுங் கையாநெட்டுடுத்துப் பெரிய / காட்டை மிக வேந்திவருமே.

அருங்கலைச்செப்பு - ஞானமகத்துவப்பத்து

ஞானத் தெளிவில் நனவலிழ்ந்து நின்றாரை / கானக் குடி வணங்குங் காண்
முற்றுந் துறந்து மூதுணர்ந்த மேலோரை / யுற்றவிலங்குந் தொழும்.
மெய்ப்பொருட்கண்ட மேலவர்க்கென்றுந் / துய்ப்பனக் கேடொன்று மில்
துணிபுற்று வுள்ளத் துறவடைந்தோர்க்கு / பிணி மூப்பு சாக்கா டறும்.

இவற்றை அனுசரித்தே யோவான் என்னும் மகாஞானியும் கானகத்தில் கிழங்குந் தேனும் புசித்து கொடிய விஷசெந்துக்களுடனும், துஷ்ட மிருகங்களுடனும் உலாவித்திரிந்தார்.

சிம்மக்குகையில் அடைக்கப்பட்ட சிம்சோனும் சுகமாக வெளிவந்தார்.

இத்தியாதி செயல்கள் யாவும் பற்றற்றகுணத்தாலும், அன்பின் மிகுதியாலும் பெறும் ஞானஸ்னானம் ஞானத்தானமென்னும் அறிவினிலையின் பலன்களேயாம்.

இதையே விவேகமிகுத்த மகாஞானிகளாம் அறஹத்து, பிராமணர், அந்தணர், தீர்க்கதரிசிகளெனப் பெயர்பெற்ற மடாதிபதிகளிடம் பெறும் ஞானதீட்சை ஞானத்தானம் எனப்படும்.

இத்தகைய புத்தசங்க குருக்களாகும் சமணமுனிவர்களின் பெயரற்றுப் போய்விட்டபடியால் மதக்கடைகளைப் பரப்பி வயிறுபிழைக்கும் வேஷபிராமணர்களும், வேஷ வேதாந்திகளும் போலி ஞானிகளும் தங்களை மெய்ஞ்ஞானிகளென வகுத்துக் கொண்டு மற்றவர்களை அஞ்ஞானிகளெனத் தூற்றி குருடனுக்குக் குருடன் வழிகாட்டுவதுபோல் அஞ்ஞானிகளுக்கும் அதியஞ் ஞானிகளே தோன்றி சத்திய ஆதாரங்களை தங்கள் சீவனத்திற்கு அதன் ரகசியார்த்தம் உணராமல் புரட்டி போதிக்குங் குருக்களும் மிக்கப் பரவிவிட்டபடியால் அநித்தியசீவன் இன்னதென்பதும், நித்தியசீவன் இன்னதென்பதும், ஜீவவூற்று இன்னதென்பதும், அஜீவவூற்று இன்னதென்பதும் கற்கபவிருட்சம் இன்னதென்பதும், அகற்பகவிருட்சம் இன்னதென்பதும்,

- 2:38; மார்ச் 3, 1909 -

உணராமலே தங்கள் ஜீவனோபாய தந்திரார்த்தங்களையும் தங்களுக்கே புலப்படா விஷயங்களையும் மாறுபடக்கூறி பேதைமக்கள் வசம் பணம் சம்பாதிப்பதே பொய்க்குருக்களின் போதனையாகிவிட்டது.

இத்தகையப் பொய்க்குருக்கள் தோன்றி புவனமாக்களைக் கெடுப்பார்கள்