பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/664

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

616 / அயோத்திதாசர் சிந்தனைகள்


அங்ஙனம் மடங்களாம் கோவில்களில் தங்கி ஞானசாதனஞ் செய்யும் சமண முநிவர்களுக்கு ஞானதந்தை, ஞானத்தாயென்போர் ஏன் உதவிபுரிய வேண்டுமென்பீரேல், ஞானசாதகர்களுக்கு யாதொரு குறைவுங் கவலையுமின்றி உதவிபுரிவதால் அவர்களெடுக்கும் ஞானசாதன முயற்சிக்கு யாதோர் இடுக்கமுமின்றி ஈடேற்றம் அடைவார்கள். அத்தகைய ஈடேற்றமாம் விவேகவிருத்திப் பெற்றோர் ஒருவர் அத்தேசத்திலுளரேல் அத்தேசத்துள்ள சகல குடிகளும் சுகவாழ்க்கைப் பெருவார்கள். அவர்களது ஞானசாதனத்தால் இராகத்துவேஷ மோகங்களை அகற்றி தண்மெயாம் சாந்தநிலை பெற்று அந்தணர்களான படியால் அவர்கள் பார்வை பெற்றோரும், அவர்களை தெரிசித்து ஒடுக்கம் பெற்றோரும் துக்கநிவர்த்திக்கேதுவாய பலன்களைப் பெறுகுவதுடன் நீதி நூல், ஞானநூல், கணித நூல், வைத்திய நூல், இலக்கிய நூல், இலக்கண நூல்களையும் ஏற்படுத்தி மக்கள் சீர்திருத்தத்திற்காய நன்மார்க்கத்தில் ஞானசாதனர்கள் பெருகி அவர்களால் மக்கள் சீர்திருத்தமடைதல் வேண்டுமென்னும் அன்பின் மிகுதியால் அவர்களுக்கு வேண்டிய உதவிபுரிந்து வருவது வழக்கமாயிருந்தது.

இத்தகையக் கோவில்களென்னும் வியாரங்கள் கட்டியுள்ள விஷயங்களும் அவ்வியாரங்களில் அரசர் உருவங்களை அமைத்துள்ள விவரங்களும் அதனுள் சமணமுநிவர்களை சேர்த்து வேண உதவிபுரிந்துவரும் விவரங்களும் கல்வியற்றப் பெருங்குடிகளுக்கும் வேஷப்பிராமணர்களுக்கும் விளங்காதிருந்தபோதினும் புத்தபிரானுக்குரிய ஞானசாதன செயலுக்குத் தக்கவாறு அளித்துள்ள ஆயிரநாமங்களில் ஒவ்வொன்றை தாங்களும் எடுத்துக்கொண்டு அப்பெயரால் ஒவ்வோர் கோவில்களைக் கட்டிக்கொண்டு அப்பெயர்களுள்ள சிலைகளையும் அதனுள்ளமைத்து, அப்பெயர்களையும் அதன் செயல்களையும் சிலதையொட்டிப் பொய்க்கதைகளையும் அதினந்த ரார்த்தம் அறியாமலே வரைந்து வைத்துக் கொண்டு வியாபாரக் கடைகளைப் போல் கோவில்களினுள் வேஷப்பிராமண மதக்கடைகளைப் பரப்பி சீவிப்பதற்கு எட்டாவது ஏதுவாகிவிட்டது.

பெளத்த தன்மங்களை எங்கும் பரவச் செய்துவரும் திராவிடர்களில் விவேகமிகுத்தோர் மிலேச்சர்களாம் ஆரியர்களின் பொய் வேஷங்களையும், நாணமற்ற ஒழுக்கங்களையும், பலசீவன்களை நெருப்பிலிட்டு சுட்டுத் தின்னுங் காருண்யமற்ற செயல்களையுங் கண்டு மனஞ்சகியாது மிலேச்சக்கூட்டங்களைக் காணும் இடங்களிலெல்லாம் அடித்துத் துரத்தி இவர்களது வஞ்சகக்கூற்றையும் பொய்வேஷங்களையுங் குடிகளுக்கு விளங்க பறைந்து வருவதுடன் தாங்கள் வாசஞ்செய்யும் வீதிகளுக்குள் வருவார்களாயின் தங்கடங்கள் சீலங்களும், நல்லொழுக்கங்களுங் கெட்டுப்போமென்று வீதிக்குள் நுழைந்தவுடன் அடித்துத் துரத்தி சாணத்தைக் கரைத்து அவர்கள் வந்தவழியில் தெளித்துக் கொண்டு போய் சாணச்சட்டியையும் அவர்கள் மீதிலுடைத்து வருவது வழக்கமாயிருந்தது.

சுரணையற்ற சீவனமும், நாணமற்ற குணமும், ஒழுக்கமற்ற செயல்களுள்ளதுடன் கருணையற்றச் செயலால் பசுக்களையும், குதிரைகளையும் உயிருடன் நெருப்பிலிட்டு அதன் புலாலைத் தின்று மதுவென்னும் சுராபானத்தை அருந்துங் கூட்டத்தோரின் நீச்சச்செயல்களை நாளுக்குநாள் கண்டுவந்த திராவிட பெளத்தர்கள் அவர்களை மிலேச்சர்கள் ஆரியர்களென்று கூறி தங்களது சீலம் நிறைந்த ஆச்சிரமங்களிலும், தாங்கள் வாசஞ்செய்யும் வீதிகளிலும் வரவிடாமல் அடித்துத் துரத்திக்கொண்டே வந்தார்கள்.

இவ்வகையாகத் துரத்துண்டு வந்த மிலேச்சாரம் வேஷப்பிராமணர்கள் இன்னுஞ் சிலநாள் திராவிட பௌத்தர்களால் துரத்துண்டிருப்பார்களாயின் ஆரியர்களின் கூட்டமுழுவதும் தங்கள் சுயதேசம் போய் சேர்ந்திருப்பார்கள்.

அக்கால் இத்தேசத்திற் பரவிநின்ற ஆந்திரசாதி, கன்னடசாதி, மராஷ்டகசாதி, திராவிடசாதியென்னும் நான்குபாஷைகளை சாதித்து வந்தவர்களுள் சிலர் கல்வியும் ஞானமுமற்றவர்களாய் ஆரியர்களின் வேஷப்பிராமணத்தையும்