பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/81

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 33


யாகாவாராயினு நாவாகாக்காவாக்காச்
சோகாப்பர் சொல்லிழுக்கப்பட்டு.

பெரியசாதி என்று பெயர்வைத்துக் கொண்டபோதிலும், பி.ஏ; எம்.ஏ; பட்டம் பெற்ற போதிலும், பயிரங்க சீர்திருத்தப் பிரசங்கங்களில் தன் நாவைக்காவாமல் புண்படக்கூறுவார்களாயின் இழிவடைவார்களன்றி புகழடையார்கள். புகழடைவோர் புன்மொழிக் கூறி, சாத்திர சம்மதமாய் சகலரையுஞ் சன்மதிக்கச் செய்து எடுத்த காரியங்களை யீடேற்றஞ் செய்வார்கள்.

அங்ஙனமின்றி சாதிகர்வம், மதகர்வம், வித்தியா கர்வம், தனகர்வம், நான்கையுங் கைபிடித்துக்கொண்டு பொதுச் சீர்திருத்தம் செய்யப்போகின்றோம் என்றால் சிறப்புறுமோ, இல்லை.

சருவமக்களையுஞ் சோதரரென்றெண்ணி நல்வாய்மெய், நன்முயற்சி, நல்ஞானம், நற்கடை பிடியினின்று சீர்திருத்தத்தை நோக்குவோமாயின் சிறப்புற்று விளங்கும். விதவாப்பிரசங்க வேதாந்தியர்களாலும் சில்லரை பிரசங்க சித்தாந்தியர்களாலும் பாட்டுப்பிரசங்க பாரதியார்களாலுஞ் சொல்லும் பிரசங்கங்களால் சுதேசஞ் சீர்பெறுமோ, இல்லை.

வித்தையில் மிகுத்த மேனாட்டாரும், புத்தியில் மிகுத்த புண்ணியவான்களும், தனத்தில் மிகுத்த யீகையாளரும், சன்மார்க்கமிகுத்த சத்திவந்தர்களும் ஒன்றுகூடி சுதேச சீர்திருத்தம் எடுப்பார்களாயின் சத்தியமே நித்தியமாக நின்று சருவ சீர்திருத்தங்களும் நிலைபெறும்.

அவசரக்கோலம் அள்ளித் தெளித்து அந்தஸ்தில் மிகுத்த ஐயாமார்கள் சாலை சார்வதானால் அவர்களைப் பின்பற்றிய அப்பாமார்கள் மூலசேர வேண்டியது முற்றும்,

அரசையெதிர்த்தக் குடியும் ஆதர வற்றக் கொடியும் அடியழிந்து கெடுமென்னும் பழமொழிக்கிணங்க.

- 1:17; அக்டோபர் 9, 1907 -

நடப்பது பழிக்கும் பாவத்திற்கும் எத்தனமாகும். நம்மை ஆண்டுவரும் பிரிட்டிஷ் ராஜாங்கத்தின் நீதியும் அன்பும் சமரசமும் நிறைந்த பாதையை உலகெங்கும் காண்பது அரிது.

காரணம் நகரசீர்திருத்தக்காரரை முதலாவது விசாரிப்பாம்.

முநிசிபல் கமிஷனர்கள் முதல் குப்பைதொட்டிப் பியூன்கள் வரையிலும் உள்ளவர்கள் யார் சுதேசிகளா பரதேசிகளா.

கமிஷனர் உத்தியோகத்தை நாடிவீடுபோரும் வண்டிகளைக் கொண்டுவந்து அழைத்துப்போய் கையெழுத்து வாங்கிக்கொள்ளுகிறவர்கள் சுதேசிகளா பரதேசிகளா, சுதேசிகளேயாம்.

இத்தகைய சுதேசிகள் வண்டியைக் கொண்டுவந்து அழைத்துப்போய் கையெழுத்தை வாங்குங்கால் கண்ட கமிஷனரை குடிகள் மற்றகாலத்தில் ஏதேனும் கண்டதுண்டோ இல்லை. இந்த வீட்டிற்கு அவ்வளவு வரி போடலாம், அந்த வீட்டிற்கு இவ்வளவு வரி போடலாம் என்று கூறி வெளிவரும் முநிசிபல் உத்தியோகஸ்தர்களுடன் கலந்து இந்தக் கமிஷனர்களும் வந்து பார்வையிடுவதுண்டோ. அதுவுமில்லை, போட்ட வரியைக் கொடுத்து விட்டால் பின்னிட்டுப் பார்த்துக்கொள்ளலாம் என்பதற்கா இக்கமிஷனர்களை ஏற்படுத்திக் கொண்டது.

பரதேசிகளைத் துரத்திவிட்டு சுதேசிகளைக் காப்பாற்றுகிறவர்கள் இவர்கள் தானோ, இல்லை இல்லை.

சுதேசிகளென்று வெளிவந்து பிரசங்கிக்கின்றார்களே அவர்கள்தான் கயவதிகாரங்களை நடத்துவார்கள் என்றாலோ, சென்றமாதம் 20உ ஆதிவாரம் மாலை இராயப்பேட்டை பெரியபாளையத்தம்மன் கோவிலண்டை பிரசங்கித்த ஓர் சுதேசப் பிரசங்கியார் அவ்விடம் வந்துள்ளக் கூட்டத்தாரை நோக்கி நாங்கள் சுதேச சீர்திருத்தம் எவ்வளவு போதித்தும் நீங்கள் கவனிக்காமல் வெள்ளைப்பறையர்களால் நெய்த சல்லாத்துணியை வாங்கி உங்கள் பிரேதங்கள்