126 - சுந்தர சண்முகனார்
பெண்ணாக- ஓர் எடுத்துக்காட்டுப் பெண்ணாகச் சீதை. விளங்குகிறாள் என்னும் பொருளில் கட்டளை' என்னும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தெரிவைமார்க்கு ஒரு கட்டளை எனச் செய்த திருவே (33):
என்று இராமன் சீதையை விளிக்கிறான்.
மிதிலை நாடியர்
நாடன் என்னும் ஆண்பால் பெயருக்கு நேரான பெண்பாலாக 'நாடி' என்னும் சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது. சீதை மிதிலை நாட்டாள்' என்னும் பொருளில் மிதிலை நாடி என்று குறி ப் பி ட ப் பட்டுள்ளாள்:
வேறிடம் வீரற்கும் மிதிலை நாடிக்கும்
கூறின நெறிமுறை குயிற்றி
(46)
என்பது பாடல் பகுதி. இலக்குவன் இராமனுக்கும், சீதைக்கும் தனியிடம் அமைத்துக் குடில் காட்டினானாம்.
திருமுகம்
கடிதம் 'திருமுகம்' என்னும் அழகிய- மங்கலமான பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளது. தயரதனது மடலைத் தூதர்கள் பரதனிடம் தந்தார்களாம்.
கொற்றவன் திருமுகம் கொள்க என்றார் (4)
என்பது பாடல் பகுதி.
வில்லின் வேதியர்
பரதன் கேகய நாட்டிலிருந்து அயோத்திக்குப் புறப் பட்டபோது, வில்லின் வேதியர் முதலான படைஞர்களும்