இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
திருக்குறளை எடுத்தாளாத புலவர்கள் இல்லை எனலாம். ஒரு நூல் திருக்குறள்களை எடுத்தாளுவதால் பெருமை பெறுகிறது. கம்பரும் இந்தக் கலையைத் தம் நூலில் கையாண்டுள்ளார். அவற்றுள், அயோத்தியா கண்டாத்தில் வந்துள்ள சில காண்பாம்:
கவரிமா அனைய நீரார்
தயரதனின் அமைச்சர்களின் சிறப்பைக் கூற வந்த கம்பர்,
கற்றவர் மானம் நோக்கின் கவரிமா அனைய நீரார் (6)
என்று கூறியுள்ளார். இது, உடலிலிருந்து ஒரு மயிர் நீங்கினும் உயிர் வாழாத கவரிமாப் போன்றவ்ர், உயிர் விடுவதால் மானம் நிலைக்குமென்றால் உயிரை விட்டு விடுவர்- என்னும் கருத்தமைந்த
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின் (969)
என்னும் திருக்குறளை அடியொற்றி அறிவிக்கப்பட்டு உள்ளது.