பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32 - சுந்தர சண்முகனார்




முறைமையால் என் பயந்தெடுத்த முவர்க்கும் குறைவிலா என்நெடு வணக்கம் கூறி.(37)


தனக்குத் தீங்கிழைத்த கைகேயிக்கும் இராமன் தெரிவித்திருப்பதும், அதிலும்- போலித்தனம் (குறைவு) இல்லாத உண்மையான வணக்கம் என்று கூறியிருப்பதும் ஒருவகைச் சுவை பயக்கிறது. இராமன் திரும்பப் பதினான்கு ஆண்டு காலம் ஆகுமாதலின் நெடு வணக்கம்' என்று கூறியுள்ளான்.

'

பள்ளி படைப் படலம்'

பரதன் பண்பு

தயரதன் தந்த திருமுகத்தை (கடிதத்தை), கேகய நாட்டில் இருந்த பரதனிடம் தூதர்கள் கொண்டு போய்த் தந்தனர். அவர்களைக் கண்டதும், பரதன், மன்னர் (தயரதன்) நலமாயுள்ளாரா என வினவினான்:

தீது இலன்கொல் திரு முடியோன் என்றான் (2}

பின்னர், இராம- இலக்குமணர் நலமா என, நலம் என, தாழ்ந்து தொங்கிய நீண்ட கைகளைத் தலைமேல் ஏந்திக் குவித்து, இங்கிருந்தபடியே புலம் (திசை) நோக்கி வணக்கம் செலுத்தினான்:

தலையில் ஏந்தினன் தாழ் தடக் கைகளே (3)

பின்னர்த் திருமுகத்தை வாங்கித் தலைமேல் வைத்துச் சிறப்பளித்தான்.

துன்று நாள்மலர்ச் சென்னியில் சூடினான் (5)

திருமுகத்தைப் படித்துப் பார்த்து, இராமனுக்கு முடி சூட்டு என்பதை அறிந்ததும், மகிழ்ச்சி மேலீட்டால், கொண்டு வந்த தூதர்க்குக் கோடிக்கு மேலும் நிதி வழங்கினானாம்.