பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 71

விரை விடை இவரும் நினைப் பிறவாமை வேண்டுநர் வேண்டுக மதுரம்
பெருகுறு தமிழ்ச்சொல் மலர் நினக்கு அணியும் பிறவியே வேண்டுவன் தமியேன்

(39)

என்பது பாடல் பகுதி. நாயன்மார்கள்- ஆழ்வார்கள் முதலியோரின் பாடல்களிலும் சொல் மலர்- சொல்மாலை என்னும் உருவகத்தைக் காணலாம். கம்பரும் சொல் மலரை விட்டார் இல்லை. மேலும் இந்தப் பாடலில், பாட்டின் நான்கு அடிகளி லும் முதல் சீர்களில் எதுகை இருப்பதுபோல், ஈற்றுச் சீர்களிலும், ஆட்டினர்- சூட்டினர்- ஊட்டினர் வாட்டினர் என எதுகை அமைத்திருப்பது சுவையா யுள்ளது. ஆங்கிலப் பாடல்களில் இறுதிச் சீர்களில்தான் எதுகை (Rhyme) இருக்கும் என்பது ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது.

''

குகப் படலம்

பிறவா வெய்யோன்

இராமன் கங்கைக் கரையில் இரவு உறங்கிக் காலை யில் விழித்தபோது ஞாயிறு தோன்றினான். மக்கள் இறப்பதுபோல், ஞாயிறு முதல் நாள் மாலை இறந்தா னாம் (மறைந்தானாம்); மக்கள் மீண்டும் பிறப்பதுபோல் ஞாயிறு மறுநாள் காலை பிறந்தானாம் (தோன்றினானாம்). ஆனால், உண்மையில் இவன் பிறவாதவனாம். பாடல்:

இறக்குமாறு இது என்பான்போல் முன்னை நாள் இறந்தான்; பின்நான்
பிறக்குமாறு இது என்பான்போல் பிறந்தனன் பிறவா
வெய்யோன் (24)