பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அய்யன் திருவள்ளுவர்



மூன்றாம் இரவு

காலம் பலருக்கும் பொதுவானது என்று கூறுகின்றார்கள்!

என்னை நாடி வந்த காலம், என்னை இறப்புக்கு ஆளாக்கிய பின்பு ஓர் அங்குலம் கூட - அது என்னை விட்டு நகருவதில்லை.

குழந்தையினிடம் சென்ற காலம், அது வளர வளர - கூடவே செல்கின்றது. இங்கே காலம் பொதுவா?

என்னிலே வந்த காலத்தின் பெயர், நேற்று! எனக்கு அது நேற்று குழந்தைக்கு அது, நிகழ் - எதிர் காலங்கள்!

எது என்னை அழித்ததோ, அது என்னோடேயே அழிகின்றது.

எது குழந்தையை வளர வைக்கின்றதோ, அது குழந்தை யோடவே வளர்கின்றது.

என்னை அழித்த காலம், பிறரை அழிக்க ஓடுவதில்லை! குழந்தையை வெளியில் கொண்டு வந்த காலம், என்னை மீண்டும் உயிரெழுப்பாது.

பத்து மணிக்கு ஒருவர் பிறக்கின்றார்! அதே நேரத்தில் ஒருவர் இறக்கின்றார்!

இறந்தவனோடு இருந்த காலம் செத்து விடுகின்றது! பிறந்தவனோடு இருந்த காலம் வளர்கின்றது:

பத்து மணி, பல இடத்தில் பிறந்தும் - இறந்தும் - வளர்ந்தும் - வளருகின்றது.

உயிரை அழித்த காலம், ஓட முடியாமல் தவிக்கின்ற நேரத்தில், சாவின் குளிர் - அதனையும் கவ்விக் கொள்கின்றது.

அந்தக் காலத்தைத்தான், நான் போர்த்திக் கொண்டிருக்கின்றேன்.

ஏனென்றால், என்னிடத்தில் அடைக்கலம் புகுந்த அந்தக் காலம் - தப்பித்து ஓடுமானால், நான் இறந்த தேதியே மக்களுக்குத் தெரியாது.

நான்போர்த்திக் கொண்டிருந்தேன் என்று கூறினேன்.

112