புலவர் என்.வி. கலைமணி
நான் இரண்டு காரியங்களைச் செய்கின்றேன் - நான் தாங்கவும் செய்கின்றேன்.
செத்துப்போன மரம் துலங்களைத் தாங்குவதுபோல, செத்துப் போன மனிதன் பூமிக்குள்ளிருந்து - பூமியைத் தாங்குகிறான்.
நிலம் யாரையும் சும்மா விடுவதில்லை.'அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல' என்ற தத்துவத்தை விட்டு நான் சிறிது விலகியே செல்கின்றேன்.
பூமி, எல்லோரையும் தாங்குவதற்காகவே மட்டும் பிறக்கவில்லை.
இன்றைக்கு அது யார் யாரைத் தாங்குகின்றதோ, நாளை அதே மனிதர்கள் - தன்னைத் தாங்குவதற்காகவே அழைத்துக் கொள்கின்றது!
வெறும் ஏமாளித்தனத்தால், ஏமாந்து போவதற்காக, - இந்தப் பூமி இவ்வளவு அழகாகப் படைக்கப்படவில்லை.
நேற்று வரையில் பூமியைக் காலால் உதைத்துக் கொண்டு திமிரோடு பேசியவன் இன்றைய தினம் உள்ளே புகுந்து கொண்டு அதைத் தாங்கிக் கொண்டிருக்கின்றான்.
சுமக்கவேண்டிய கட்டத்தில் எதையும் சுமந்தே தீர வேண்டும்.
‘வாழ்நாள், தறியின் பாகைப் போல மிக வேகமாக ஓடுகின்றது. என்று பைபிள் கூறுகிறது.
தறியின் பாகாக அது ஓடுகின்ற காரணத்தால், துணி நெய்யப் பட்டிருக்க வேண்டும்.
யார் உடுத்துகிறார்கள் அந்தத் துணியை?
ஒரு மனிதனுடைய வாழ்க்கை.
அனுபவம் என்ற துணியை நெய்து விட்டு-ஓடி ஒளிகின்றது.
உடையற்ற மனிதனாக, மனிதன் புதை காட்டுக்குள் போவதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
அப்படியென்றால், அவனது அனுபவத்துகில் எங்கே மடித்து
113