பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/125

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி


தமிழ்த் தொண்டர் மாக்கதை போன்றதோர் வீர வரலாறு தேவை.

அந்த வீர வரலாறு போரில், நெருப்போடு நெருப்பாக போட்டியிட்டு, எந்த ஓரினத்து மகனும், தனது தாய் மொழிக்காகத் தீயாடிக் கருகியதாகத் தமிழ் நாட்டைத் தவிர வேறு எந்த நாட்டிலும் வீர வரலாறில்லை!

வேண்டுமானால், ஐரிஷ் நாட்டின் சின்பின் இயக்கத் தலைவர் டிவேலரா இத்தாலி விடுதலை வீரன் கரிபால்டி போன்றவர்கள் மொழி உரிமைக்காகப் பேசியிருக்கலாம் - போராடியிருக்கலாம். அவ்வளவுதான்!

அனால், அவர்கள் அறிஞர் அண்ணாவைப் போன்றதோர், கடுமையான ஒரு - மொழி வரலாறு படைக்கப்பட்டவர்கள் அல்லர்!

பாம்பன் சுவாமிகள், தமிழ்க் கடவுளான குறிஞ்சி நில அழகு முருகனை, 6666 பாடல்களால் பாடி, தெய்வீக வீர வரலாறு படைத்துள்ளார்! அவற்றுள் ஒரு காண்டம் செக்கர்வேள் செம்மாப்பு! - செக்கர்வேள் இறுமாப்பு, என்பது! செக்கர்வேள் என்றால், தமிழ்க் குமரன் முருகன், செம்மாப்பு என்றால் முழுமுதல் சிறப்புகளைக் கூறும் நூல் என்று பொருள்!

செக்கர்வேள் இறுமாப்பு என்றால், அந்தத் தமிழ் தெய்வத்தைத் தவிர வேறு எந்தக் கடவுளையும் பாட மனமில்லாத கடவுள் பக்தியினால் பழுத்த இறுமாப்பின் உயர்வு!

தமிழ் அன்னையின் எதிர்ப்புப் பகைகளை, அதன் வியத்தகு வியூகங்களை, பரணி பாடிடும் அனைத்துச் சிறப்புக்களோடும், விருப்பு வெறுப்பின்றித் சம்பவச் சிந்தனைகளைத் தொகுத்து, செம்மாந்தும், இறுமாந்தும் தமக்கே உரிய நேரிய நெஞ்சத்தோடும், எவருக்கும் அஞ்சா வீரத்தோடும் - தமிழ் மொழிப் பக்தியோடும் வீர வரலாறு எழுதப்பட வேண்டும்! இது சில தமிழ் நெஞ்சங்களின் மன நினைவுகளில் ஒன்று.

அந்தச் சுமைகளைத் தாங்கிவாழும் - வளரும் தலைமுறைகள் - தமிழ்ப் பரம்பரைகள்!

123