பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/126

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்



திரை இசைப் பாடல்கள்
ஓர் ஆய்வு

திராவிடர் இயக்கக் கவிதா மண்டலத்து நவமணிகளில் ஒன்றாக முத்துப் போன்று மிளிர்ந்து கொண்டிருப்பவர் கவிஞர் முத்துலிங்கம்.

அவரது பெயரின் பகுதியாக விளங்கும் முத்து எங்கெங்கே பிறக்கின்றதோ, அதற்கேற்பத் தகுதியும் தரமும் உண்டு.

இப்பி, உடும்பு, கடல்மீன், கதலி, கழுகு, கமலம், கரும்பு, சங்கு, செந்நெல், திங்கள், நத்து, நாகம், மூங்கில், மேகம், யானை, மருப்பு, போன்ற இடங்கள் எல்லாம் முத்துமணி பிறக்கிற இடங்களாகும்.

அவரது திருப்பெயரின் விகுதியான 'லிங்கம்' என்ற சொல், அவனி வாழ் மக்கள் தியானித்து வழிபடுதற்குரிய தெய்வீகக் குறியாகும்.

மேதினி வாழ் மக்கள் மேம்பட முத்தொத்த இலட்சிய முத்தி பெற பிறவிக் கடலில் மூழ்கி உய்வுற, வாழ்க்கையிலே மக்கள் அவரவர் ஓர் அடையாளத்தைப் பதித்து மறைவது உலகியல் மரபு அதுதான் பிறப்புக்குரிய சான்று!

கவிஞர் முத்துலிங்கம், தனது திரையுலக எழுத்துத் துறையில் பதித்துள்ள அறிவின் சான்றே அவரது திரையிசைப் பாடல்களாகும்.

கவி மாமன்னன் ஒட்டக்கூத்தர் பெருமான், முதல் குலோத்துங்கன், அவன் மகன் இரண்டாம் குலோத்துங்கன், அவன் மகன் இரண்டாம் ராசராச சோழன் அவையிலும் ஆஸ்தானக் கவிஞராக - மேதமைப் பெற்றவர் ஆவார்!

சோழர் பேரரசில், தாத்தா, தந்தை, பேரன் என்ற மூவர் அவைகளிலும், 'விக்கிரமன் சோழன் உலா' பிள்ளைத்தமிழ், தக்கயாகப்பரணி, ராசராசன் உலா, போன்ற அறிவு தாலாட்டும் அற்புத நூல்களை இயற்றிய பெருமான் ஒட்டக்கூத்தனார்!

கவிஞர் முத்துலிங்கம், திராவிட இயக்க ஆட்சியிலே,

124