பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/128

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்


செய்யப்பட்ட அக்கிரீடம் எப்படி எள்ளளவும் சிதறாமல் குறையாமல் கொடுத்த எடையளவு பொன்னோடு அப்படியே இருக்கும்? - சிந்தித்தான் கிரேக்க வேந்தன்.

சிந்தனையாளன் ஆர்க்கிமிடீஸ் என்ற அறிவியல் விஞ்ஞானியான கணித மேதையிடம் கிரீடத்தைக் கொடுத்து எடையளவின் உண்மையைக் கண்டு கூறிடக் கேட்டுக் கொண்டான்.

அந்தக் கணித வித்தகன், தான் நீராடும் தொட்டியின் நிறைய நீரை நிரப்பி, கிரீடத்தை மூழ்க வைத்து, வழிந்து வெளியே வந்த தண்ணீரை எடை போட்டு, அதன் உண்மை எடையை ஆர்க்கிமிடீஸ் என்ற அறிவியல் வித்தகன் கண்டு பிடித்துக் கூறினான்.

வழிந்த அந்தத் தண்ணீரின் எடைதான் டூ பை ஆர் ஸ்கொயர்டு என்ற மதிப்புச் சூத்திரத்தை மன்னனிடம் விளக்கினான்.

அந்தக் கணிதத் தத்துவம் இன்றும் கணித உலகில் உலாவரும் சூத்திரமாக உள்ளது. இன்றைய மாணவர்களும் அதைக் கற்று கணிதம் போட்டு வருகிறார்கள்.

இளங்கோவடிகள், ஆர்க்கிமிடீஸ் சிந்தனையாளர்களைப் போல, திரை உலகச் சிந்தனையாளர் கவிஞர் முத்துலிங்கம். 224 திரை இசைப் பாடல்களும், கற்றார் போற்றும் கலித்தொகையின் 133வது பாடலாக தமிழர்தம் நவமணிக் கொத்துக்களாக, மெய்ப்பாட்டின் ஒன்பது பண்புகளை விளக்கி உரைக்கும் அறிவுரிைச் சொத்துக்களாக இன்றும் உலா வருகின்றன என்றால் மிகையாகா.

கற்றார் போற்றும் அந்த 9 பண்புகள் யாவை?

அவற்றில் அரும் தத்துவங்கள் என்னென்ன? இதோ அவை-

'போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை' என்ற பொருளுக்கேற்ப 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' என்ற படப் பாடலில் ஒரு பண்பாக அதைப் புனைந்துள்ளார் கவிஞர்.

'பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்' என்ற பண்புடைமைக்கு எடுத்துக் காட்டாக உள்ளது 'ஊருக்கு

126