பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/130

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்


இந்தப்பாடல் 1978 - 79 ஆம் ஆண்டின் சிறந்த பாடல் ஆசிரியருக்கான தமிழக அரசின் விருதைக் கவிஞருக்குப் பெற்றுத் தந்துள்ளது.

'கண்ணோடாது உயிர் வெளவல் என்பதே முறை' என்ற பண்பைத் தூங்காத கண்ணின்று ஒன்று படத்தின் பாடலிலே பளிச்சிடுகின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக, 'பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்' என்று அகழ்வாரைத் தாங்கும் நிலமாக, தாய்க்குலமே வருக' என்ற படத்தின் பாடலாக ஒலித்துள்ளது.

தமிழ்ச் சமுதாயத்தின் தலையாய இந்த ஒன்பது பண்புகளும், வான மண்டலக் கதிரவனைப் போல தலைமை தாங்கி, பிற கோள்கள் தன்னைச் சுற்றியே சுழன்று வருமாறு வகுத்துக்கொண்ட நீள்வட்டக் கோள்கள் பாதைக்கேற்ப வலம் வந்து, பருவ மாற்றத்தை உருவாக்கிடும் தட்ப வெட்பமான உயிர்ச்சக்தியைப் படங்களுக்கு வழங்கியுள்ளன.

காகுத்தன் மனைவியைக் கவர்ந்து சென்ற ராவணனை எதிர்த்து, சடாயு என்ற கழுகு போரிட்டபோது, தளர்ந்து போன இலங்கை வேந்தன், 'உன் உயிர் எங்கே உள்ளது?’ என்று பறவை வேந்தனைக் கேட்டான்.

உண்மையை மறைக்கும் உள்ளமற்ற கழுகு சடாயு, எனது உயிர் இறக்கைகளில் உள்ளது" என்று உரைக்க, அதற்கு மறு கேள்வியாக, 'உன் உயிர் எங்கே உள்ளது?’ என்று இலங்காதிபனை பட்சியினத் தலைவன் வினவ, "கால் கட்டை விரலில் இருக்கிறது" என்றான் ராவணேஸ்வரன்.

உடனே சடாயு, கால் கட்டை விரலைத் தனது அலகால் குத்திக் கொல்லக் குனிந்தபோது, இலங்கேஸ்வரன் தனது வாளால் சடாயுவின் இறக்கைகளை வெட்டி வீழ்த்தினான். கழுகும் துடிதுடித்து வீழ்ந்தது தரையில்!

சில படத்தின் பாடல்கள் சடாயுவைப் போல உண்மையாக எழுதப்பட்டதாகவே உள்ளன.

ஆனால், படச் சம்பவங்கள் சில, ராவணனாக மாறிப் பாடல்

128