பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/158

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்


 மாந்தரின் வாழ்க்கைக்கு அது ஒரு மா மருந்து நோய்க்கு ஏற்றபடி நீங்கள் அதை உட்கொள்ள வேண்டும்.

திருக்குறள் தொடங்கிய காலத்திலிருந்து, விளம்பரத்திற்காக உரையெழுதுகின்ற ஆசிரியர்கள் வரை, அதன் நுணுக்கம், முடியாத மர்மக் கதையாகவே இருக்கின்றது - நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்?

சூழ்நிலையின் காரணமாக நீங்கள் மாறி விட்டால், பிறக்கப் போகும் தொட்டில்கள், உங்களை மறந்து விடும்! எனவே, எச்சரிக்கையாக இருங்கள்.

ஏனென்றால், இனிமேல் பிறப்பவர்கள் உங்களைத் தூக்கி எறிபவர்களாகக் கூட இருக்கலாம் அல்லவா?

எவன் எந்தக் கோணத்திலே பிறந்து, புலவர் தெய்வ நாயகம் மறுத்ததைப் போல விதண்டாவாதமாக மறுப்பானோ என்பதை யார் அறிவார்?

எனவே, காலம் கடந்து சிந்தியுங்கள் - (without time) தொட்டில் குழந்தைகள் உங்களைத் தொடர்வதற்கேற்ப - சிந்தியுங்கள்.

1972 - மே-3,4 தேதிகளோடு - திருக்குறளின் விதி நிர்ணயிக்கப் படுவதல்ல.

உங்களுடைய விவாதங்கள் அனைத்தையும், அய்யன் திருவள்ளுவரது உயிர்ச் சொல்லோட்டக் குறள் நாதங்கள், காற்றிலேயிருந்து கவனித்துக் கொண்டு இருக்கின்றன.

அய்யன் திருவள்ளுவர் முன்னாலே - நீங்கள் சிறுபிள்ளைத்தனமாக இருக்கக்கூடாது.அவர் எதிர்பார்த்த-முதிர்ச்சியடைந்த - முழு மனிதனை உங்களுடைய ஆய்விலே உருவாக்கிக் காட்டுங்கள்.

திருக்குறளாராய்ச்சியைப் பொறுத்தவரை, இந்த ஆய்வு மாநாடு, அண்ட அளவில் வைத்து மறந்த சிறுபுள்ளியாகவே கருதுகின்றேன்.

ஏனென்றால், அய்யன் திரு வள்ளுவன் அண்டத்தைவிட விரிந்தவன் என்பது பொதுமக்கள் கருத்து.

156