பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/173

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி


சுப்பிரமணிய பாரதிக்குப் பிறகு பைந்தமிழ்த்
தேரை ஓட்ட ஒரு சாரதி தேவைப்பட்டான்!
அந்த சாரதி இடத்திலே நான் உட்கார்ந்தேன்!
சழக்கர்கள் வெட்டி வைத்த பள்ளம் -
கயவர்களைத் தடுப்பதற்காகப் போடப்பட்ட வேலி -

இதைத் தாண்டி நான் தமிழ்த் தேரை ஓட்டிச் செல்ல வேண்டும்.

பாரதியார், தமது கவிதையின் ஆயுதமாக, நிலவைத்தான் அதிக நேரம் வைத்துக் கொண்டிருந்தார்.

அவர் எனக்கு ஆயுதமாகத் தந்துவிட்டுச் சென்றது எதைத் தெரியுமா?

நெருப்பை!
கொதிக்கும் செம்பரப்பை!
வெடிக்கும் எரிமலையை!
சீறும் அம்பை!
பாயும் புலியை!
சாய்க்கும் புயலை!
கொந்தளிக்கும் கடலை!
இவற்றை வைத்துக் கொண்டு விளையாடு -
என்று என்னிடம் சொல்லிவிட்டு
அவர் காற்றைப் போல கடுகிப் பறந்து விட்டார்.

பாரதியாரோடு முரண்பட்டவர்கள், என்னிடம் வந்து சரண்பட்டார்கள்.

“கொலை வாளினை எடடா" என்று நான் கூறியதுதான் தாமதம். நிலை மாறிற்று. "எலி வளைக்குள் நுழையடா" என்று எதிரிகள் நுழைந்தனர்.

தமிழ் என்றால் என்ன என்று கேட்டார்கள்.

171