பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/174

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்


அடுத்த நிமிடம் 'தமிழுக்கு அமுதென்று பேர், அது எனது உயிருக்கு நேர்' என்று குறிப்பிட்டேன்.

தமிழ் எதிரிகள் தலையற்று வீழ்ந்து துடிதுடித்தனர்.

"தமிழர் என்று சொல்லுவோம் - தமிழ்ப் பகைதனை நடுங்க வைப்போம்”

"இமய வெற்றியின் முடிவில் தமிழ் கொடியை ஏற வைத்த நாங்கள்' - என்று எழுதியதுதான் தாமதம், உடனே மூளையில்" குத்திற்று பின்னேற்றக் கும்பல்.

"எமை நத்துவாயென எதிரிகள் கோடி இட்டழைத்தாலும் தொடேன்'

'தமிழரின் மேன்மையை இகழ்ந்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன்'

- என்று கூறியவுடனே வாலையாட்டிக் கொண்டு எதிரிலே வந்த வேற்றுமொழி, கால் பிடறியட ஒடிற்று.

வான்
மண்
கால்
எரி
வளி

எழுந்த ஓர் அசைவினாலே - வானோடு வெண்ணிலவும் - விரிகதிர் வானும் - எண்ணிலாதனவும் எழுந்தன.

எனது தொழிலை நோக்கி, நான் தொழ ஆரம்பித்ததும் - வழி வந்த பணத் திமிர்-பணக் கொழுப்பு-கவிதைச் சூட்டிலே உருக ஆரம்பித்தது.

கந்தையை அணிந்தாலும் - இரு கைகளைக் காட்டி -
மொந்தையின் கூழை மொய்த்துக் குடித்தோம்.
காடு களைந்தோம். கழனிகள் திருத்தி
நாடு நகரங்கள் ஆக்கினோம்.

பொற்றுக்களை, மணிக்குலத்தைப் போய் எடுக்க அடக்கிய

172