பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/186

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்



வேறு


உயிர்த்திரி எண்ணெய் வற்றி,
ஒளியுற வறுத்துக் கண்கள்
மயிரிழை இழையாய்க் கீழே
மடங்கிடும் போது இயேசு
கயவரைத் தண்ணிர் கேட்டார்
காடியை வாயில் வைத்தார்
நயனில செய்தார் குற்றம்,
"நாயக பொறுப்பாய்” என்றார்.


வேறு


தத்துவத்தைக் கடைந்துயிர்க்கே உண்பிக் கின்ற
தருணத்தைத் தானேற்று மனித நஞ்சு
வித்திருக்கும் திக்கேறி விளக்கம் ஈந்து
வினையாற்றும் இயேசு நாதர், எதிரி தன்னைக்
"குத்தஒளி வாளெடுத்த பேது ருவை
"குத்தாதே வாளெடுப்போன் வாளால் வீழ்வான்"
சத்தான வாசகத்தைக் கேளாய் என்றார்
சாயாத சீர்திருத்தம் இதுதா னன்றோ!

கொலைமலிந்து தெய்வத்தின் பலிபீடத்தில்
கொடுமையெலாம் மலிந்திருந்த அந்த நாளில்
சிலைமலிந்து சிறுதெய்வம் பெருந்தெய்வங்கள்
தெருவுக்கு தெரு மலிந்தே இருந்த நாளில்
விலைமலிந்து போய்விட்ட போலி ஞான
போதகர்கள் மலிந்திருந்த அந்த நாளில்
சிலைமலிவை கொலைமலிவை ஒழித்துக் கட்ட
சீர்திருத்த வாதியாக இயேசு வந்தார்!

மண்ணிடையே பிறந்ததெல்லாம் மண்ணுக் கென்றார்
விண்ணிடையே பிறந்ததெல்லாம் விண்ணுக் கென்றார்
எண்ணத்தைப் பொருத்துத்தான் செயலும் சொல்லும்
எதிரிகளை நேசிக்க வேண்டும் என்றார்

184