பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/44

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்


தால் படைக்கப்பட்டவனும் கவிஞன்' என்ற உண்மையை உறுதிப்படுத்தியவர்!

மக்களிடையே மண்டிக் கிடந்த மனப் போராட்டங்களை, வாழ்க்கைச் சிக்கல்களை வேரறுக்க, ஞான ஞாயிறாய் வளரலானார்.

சாயாத தமிழ்ச் சமுதாயம் சாய்ந்து விடக்கூடாதே, தன்மானத்துடன் அது தனது பண்பாட்டினை ஓம்பி, தரணிக்கு முன் தலை நிமிர்ந்து வாழவேண்டுமே, என்பதற்காக அவர் பெருமுயற்சியில் ஈடுபட்டவர் அவரது எழுத்துத்துறைக்கு அதுதான் அறிவு மூலம்.

தமிழுக்காக உழைக்க வந்த இடைக்காலக் கவிஞர்களைப் போல, விதி என்ற இரண்டு எழுத்துக்களோடு தனது வாதத்தை நிறுத்திக் கொள்ளவில்லை, அய்யன் திருவள்ளுவர்.

குறள் என்ற மூன்றெழுத்துக்களால் தனது வாதத்தை விரிவு படுத்திக் கொண்டவர்! வியப்பானது கூட அல்ல - இது!

தமிழ் என்ற அவரது தாய் மொழி - மூன்று எழுத்தாலானது. அதன் அடிப்படையிலேதான், முதற் குறளை 'அ'என்ற உயிர் எழுத்தில் துவங்கி, 1330-வது குறளை - 'ன்' என்ற மெய் எழுத்திலே முடித்தார்.

அவரது குறளுக்கு அடிப்படை உணர்ச்சிகளை வாரி வழங்கியது - தொட்டிலிலே சிரிக்கும் மழலையின் குழி விழுந்த கன்னம் முதல் - உரனெனும் தோட்டியான் வரையிலாகும்.

உவமைக்கு அடங்குகின்ற மனித இனத்திலேயிருந்து, உவமைக்கு அடங்காத ஏதோ ஒன்றுவரை - உணர்ச்சிகளை வாரி வாரி வழங்க ஆரம்பித்தன - அவருக்கு !

கொந்தளிக்கும் கடல்!
வெடிக்கின்ற நிலம்!
வீசுகின்ற புயல்!
நிமிர்ந்த நெடுங்குன்றம்!
நிமிராத வயற் கதிர்கள்!
ஓடுகின்ற மேகங்கள்!

42