பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/66

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பாவேந்தர் பாரதிதாசனார்





நி
லை பெற்ற சிலையாகி, நெடும் புகழை
நிலை நிறுத்தி, அவை போன்ற
தமிழ் மக்கள் நெஞ்சங்களிலெல்லாம்
இடம் பெற்ற பாவேந்தே! புரட்சிக் கவியே!

நின் நாக்கு- ஞானத் தகடு!
நின் எழுதுகோல்- வைரக் கோல்!
நின் ஏடு - தமிழ்நாடு!

சந்தனத்தில் உளிபட்டு, சந்திரனில் வதனம் தீட்டி,
கரு நாவற் கனியெடுத்துக் கண்ணாக்கி,
தத்தும் கிளி நடையை - நடையாக்கி,
சங்கத்தைக் கண்டமாக்கி,
கவிதையிலே தமிழ்க் கன்னியை,
உருவாக்கிய கவி மா மன்னா!
தமிழர் தம் மொழி விளக்கே!
காலத்தின் அணுக்களிலே - நின்
கை வண்ணம் காணுதய்யா!

ஓடியத் தமிழ்க் குருதி
இடையிலே இறுகி,
பனிப் பாறையாகி,
சங்கை கெட்ட நிலையிலே,
சங்கங்களை வளர்த்தத் தமிழகம்,
பொங்கும் வாரிக்கு முன்னாலே -
புலம்பி நின்றது.

மின்னலை இழுத்து
மலை பிளக்கும் மேகம் போல்,

64