பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/69

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி


தில்லையைப் போய் பாரடா” என்று
ஆவர்த்தனமாடின!
'இல்லை என்பேன் நானடா,
அத் தில்லை கண்டு தானடா, என - நீர்
எதிரிடி குமுக்கமிட்டதைக் கண்டு,
'கவி'கள் எல்லாம் கிடைத்த கிளைகளை
இறுகப் பற்றித் தலைகீழாய்த் தொங்கி
ஊஞ்சலாடியதைத் தமிழ் நாடே
கண்டு விலா நோகச் சிரித்ததே !

'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது' என்ற
விடுதலை முழக்கக் கவிதைகள் வீதியுலா வந்தன!

சமுதாய விரோதிகளை வீதியிலே நிறுத்த,
'கொலை வாளினை எடடா, மிகு -
கொடியோர் செயல் அறவே,
குகை வாழ் ஒரு புலியே உயர் - குணமேவிய தமிழா' - என்ற
வீர அணிவகுப்பு நடைப் பாடலைப் பாடி,
எமது நாடி நரம்புகட் கெலாம் நீர் முறுக்கேற்றியதை,
புரட்சிக் கவிஞரே, மறப்போமா யாம்?

அரசியல் விடுதலைக்குப் பாரதியார்
கவிதை எழுதினார்! சமுதாய விடுதலைக்கு
உம்மைப்போல் எழுதினவர் யார்? எவருளர்?
உதாரணத்துக்காக ஒரு விரலை மடக்க உண்டா ஆள்?
ஆயிரக் கணக்கான கவிதைகளால்
இராமயண இராமனைப் பாட
ஆயிரம் கவிஞர்கள் பிறந்தார்கள்.
இராவணன் மறத்தை, திறத்தை, மாண்பைப் பாட,
ஒரு கவிஞன் இன்றுவரைப் பிறந்தானா? -
முதன் முதலில், உம்மைத் தவிர!

'தென் திசையைப் பார்க்கின்றேன்
என் சொல்வேன் - என்றன்
சிந்தையெல்லாம் - தோள்களெல்லாம்
பூரிக்கு தடடா !
'குன்றெடுக்கும் பெருந்தோளான்,

67