பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது





கவியரசு "கண்ணதாச"னின்
"நான் நினைத்துப் பார்க்கிறேன்!"


விஞர் கண்ணதாசன் அவர்கள், "கண்ணதாசன்” என்ற, தனது திங்கள் இதழில், "நான் நினைத்துப் பார்க்கிறேன்” என்று தலைப்பிட்டு தனது நெஞ்சுக்குத் தானே நீதி வழங்கிக் கொண்டார்.

தி.மு.கழகத்திலிருந்து சொல்வின் செல்வர் ஈ.வெ.கி. சம்பத்து அவர்களுடன் வெளியேரி, தமிழ் தேசிய கட்சியைத் துவங்கி, பிறகு, காங்கிரஸ் கட்சியிலே சேர்த்து, மீண்டும் தி.மு.கழகத்திற்கே திரும்பி வருவதர்காக தனது கடத்தகால அரசியல் பொது வாழ்க்கையை, "நான் நினைத்துப் பார்க்கிறேன்” என்று கண்ணதாசன், சேத ஏட்டில் எழுதியிருந்தார்.

இன்று நான்காவது முறையாகத் தமிழக முதல்வராக இருக்கும் கலைஞர் அவர்கள், 1969-ம் ஆண்டின்போது 'மாலை மணி’தானேட்டின் துணை ஆசிரியராக இருந்த என்னைத் தொலைபேசியின் அழைத்து, கவிஞர் கண்ணதாசன் மனக்கோட்டம் பெறும் நிலையின், தவறாக ஏதுக் எழுத வேண்டாம் என்து கேட்டுக் கொண்டாா்

அதற்கேற்ப, கலைஞர்கட்டளையை ஏத்து கந்தலான கவிஞருடைய இதயத்திற்குக் கொடுக்கப்படும் கனிவான ஒத்தடங்களாக - 'மாலைமணி' நாளேட்டில் கவிஞர் கண்ணதாசன் அவர்களை வரவேற்றிட அன்று எழுதிய எனது அனுதாப வரவேற்பு-இந்தக் கட்டுரை!

ரையேறிய பிறகு மீண்டும் கடலிலே விழக்கூடாது என்று அந்தக் கவிதை நெஞ்சு நினைக்கின்றது.

இறந்த காலத்தில், அது பறந்திருந்த வானத்தில் உதிர்ந்து

90