பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

என்றும், அப்படிக் குறைக்கின்ற சமயத்தில் டெண்டர் தொகை 25 சதவிகிதம் வரைக்கும் கூடுதலானாலும் ஒத்துக்கொள்ளலாம் என்கிற ஒரு நிபந்தனை குறிப்பிட்டிருந்தார்கள். ஆகையினால்தான் குறைந்த டெண்டர் கொடுத்த திருவாளர்கள் சத்தியநாராயணா பிரதர்ஸ் அவர்களை தாங்கள் கோரி இருக்கிற அந்நியச் செலாவணித் தொகையை குறைக்க வேண்டும் என்று கேட்க, அவர்கள் பரிசீலனைசெய்து அந்நியச் செலாவணியை 120 லட்சமாகக் குறைத்துக்கொள்ள முடியும். ஆனால் இந்தத் தொகைக்குப் பதிலாக ரூபாய் 90 இலட்சம் கூடுதலாகக் கொடுக்கவேண்டும் என்று கோரினார்கள். அதற்கு அவர்கள் கொடுத்த காரணங்கள் தாங்கள் அமைக்கப்போகும் தொழிற் சாலைகளுக்கு வேண்டிய இரும்பு சாமான்களும், தளவாடங்களும், இயந்திரங்களும், லாரி, டிராக்டர் போன்ற ஊர்திகளும் மேல் நாட்டிலிருந்து கொண்டுவருவதற்காக ரூபாய் 181 லட்சம் கோரி இருந்ததாகவும், அதற்குப் பதிலாக நமது நாட்டிலேயே முடிந்த வரைக்கும் மேலே சொல்லப்பட்ட இனங்கள் வாங்குவதற்கு ஏற்பாடு செய்யப்போவதாகவும், அதனால் கூடுதலாக நிதி செலவாகும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். இது உண்மையா என்று பரிசீலனை செய்து பார்க்கப்பட்டது. இரும்பு எஃகு சாமான்கள் வெளி நாட்டிலிருந்து கொண்டு வருவதற்கும், நமது நாட்டிலேயே வாங்குவதிலும் விலையில் ஏராளமான வித்தியாசம் இருக்கிறது என்பது சந்தேகமேயில்லை. உதாரணமாக எஃகு கம்பிகள் நமது நாட்டிலேயே வாங்கினால் டன் ஒன்றுக்கு ரூபாய் 4,000 ஆகும். இந்த விலைக்கும் நமக்கு வேண்டிய அளவுக்கு எஃகுக் கம்பிகள் கிடைப்பதில்லை. வெளிநாடுகளிலிருந்து வாங்கப்பெற்றால் விலை டன் ஒன்றுக்கு ரூபாய் 1,800 ஆகும். இதைப் போலவே எஃகுத் தகடுகளும் இதர சாமான்களும் உள்நாட்டிலிருந்தே வாங்கவேண்டுமென்றால் அதிக விலை கொடுத்து வாங்கவேண்டியிருக்கிறது. ஆகவேதான் அவர்கள் டெண்டர் தொகை 90 இலட்சம் கூடுதலாகக் கேட்பதை ஒப்புக்கொண்டோம். அதே நேரத்தில் அவர்கள் அந்நியச் செலாவணியில் ரூபாய் 60 லட்சம் குறைத்துக் கொண்டது மிகவும் விரும்பத்தக்கதாகும்.

மற்ற டெண்டர் கொடுத்த நிறுவனங்கள் எவ்வளவு அந்நியச் செலாவணி கேட்டார்கள், அவர்கள் டெண்டர் தொகை