கலைஞரின் சட்டமன்ற உரைகள்
173
பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக, கட்டப்பட்ட விடுதிகள் 134. 11 இருந்தது, 1967-ல். இன்றைக்கு பிற்படுத்தப்பட்டவர்களுக்காக இருக்கிற விடுதிகளின் எண்ணிக்கை, அதையும் சேர்த்து 145.
வேலை வாய்ப்பு, கல்லூரிகளிலே இடம் அளித்தல் போன்றவைகளில் அரிசன மக்களுக்கு 16 சதவிகிதம் என்று இருந்ததை 18 சதவிகிதம் என்று ஆக்கியதும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 25 சதவிகிதம் என்று இருந்ததை 31 சதவிகிதம் என்று ஆக்கியதும் சாதாரணமாகத் தெரியலாம். ஆனால், சமுதாயத்திலே அது எவ்வளவுப் பெரிய புரட்சி என்பதை இந்தச் சமுதாயத்தி னுடைய கடந்தகால வரலாற்றை எண்ணிப் பார்க்கின்றவர் களுக்குத்தான் நன்றாகப் புரியும்.
அதுமட்டுமல்ல, அரிசனங்கள் அறங்காவலர்களாக இல்லாததையும், அவர்களை அறங்காவலர்களாகப் போடலாம், அல்லது போட வேண்டுமென்ற பரிந்துரை இருக்கிறது. போனால் போகட்டும், போடுங்கள் என்கின்ற தயவு தாட்சண்யத்தின் அடிப்படையிலே இருந்தது. அரிசனங்கள் அறங்காவலர்களாக ஆக்கப்பட வேண்டும், அது சட்டமாகவே ஆக்கப்பட வேண்டு மென்ற நோக்கத்தோடு, எந்த ஒரு ஆலயத்திலே இருக்கிற எந்த அறங்காவலர் குழுவிலும் நிச்சயமாக ஒரு அரிசனச் சகோதரன் இடம் பெற்றே ஆக வேண்டுமென்ற சட்டத்தை அமைத்தது திராவிட முன்னேற்றக்கழக அரசு என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.
அதைப்போலவே மேலும் ஒரு புரட்சித் திட்டமாக, அர்ச்சகர் என்றால் ஒரு வகுப்பிலே பிறந்தவர்களாகத்தான் இருக்க வேண்டுமென்ற நிலையை மாற்றி, ஆண்டவனை பூஜிக்க, அர்ச்சனை செய்யக் கூடிய தகுதி படைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அர்ச்சகராக வரலாம் என்று சாதிச் சனியனுடைய இடுப்பை ஒடித்த அரசு திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.
அரசாங்க அலுவலர்கள், அவர்களுடைய தேவைகள் கோரிக்கைகள் நிரந்தரமானவையானாலும் இந்த அரசாங்க அலுவலர்களுக்கு இரண்டாவது சம்பளக் குழு ஒன்றினை நிறுவி 21 கோடி ரூபாயை அள்ளி வழங்கியது திராவிட முன்னேற்றக் கழக அரசு. இதிலே மாறுபாடுகள் இருக்கிறது என்று அறிவித்ததும், ஒரு நபர் குழு ஒன்று அமைத்து, அந்தக்