176
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
தங்கள் மாநிலத்திலே இதை உருவாக்கவேண்டுமென்ற அளவுக்கு வழிகாட்டியாக அமைந்திருக்கிறது. இன்று நான் வருகிற வழியிலே அயோத்தியா குப்பத்தைப் பார்த்தேன். பீச் ரோடிலே குடிசைகள் எல்லாம் அகற்றப்பட்டு அந்த மக்கள் எல்லாம் தங்களுக்காக கட்டப்பட்ட கூடகோபுரங்களிலே இருக்கிறார்கள். ஏதோ சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் எல்லாம் இருந்ததாகச் சொல்கிறார்களே அவர்கள் மீண்டும் வந்து ராஜ உடை அணிந்து கொண்டு கூடகோபுரங்களிலே உள்ள உப்பரிகையிலே வந்து பார்த்தால், அதைப் பார்க்கிற நேரத்திலே ஏற்படுகிற மகிழ்ச்சியை விட, அதிக மகிழ்ச்சி குடிசையிலே அன்றைக்கு வாழ்ந்த மக்கள் இன்றைக்குக் கூடகோபுரத்திலே இருப்பதைப் பார்க்கிற நேரத்திலே நமக்கு ஏற்படுகிறது.
நொச்சிக் குப்பத்தைப் பாருங்கள். அயோத்தியா குப்பத்தைப் பாருங்கள். கோட்டூர்புரத்திலே, வியாசர்பாடியிலே ஏழை மக்களுக்காக அமைக்கப்பட்டிருக்கின்ற எழில் மாளிகைகளைக் காணுங்கள். இதற்காக 7 ஆண்டுக்கால திட்டமொன்றை உருவாக்கி அதனை நிறைவேற்றிட திரு.இராம அரங்கண்ணல் அவர்கள் தலைமையில் குடிசை மாற்று வாரியம் உருவாக்கப்பட்டது. 63 திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டு மென்ற அளவில் அந்தத் திட்டத்தின் கீழ் 23,232 குடியிருப்புகள் கட்டப்பட வேண்டுமென்பது திட்டம். அவற்றில் 4,590 கட்டி முடிக்கப்பட்டவை, வேலை நடந்து கொண்டு இருப்பவை, பாதியளவுக்கு நடந்துகொண்டிருப்பவை 7,897, ஆரம்ப வேலை தொடங்கப்பட்டு இருப்பவை 10,745. இந்தத் திட்டத்தை ஜெயப்பிரகாஷ் நாராயண் பாராட்டியிருக்கிறார். இந்தத் திட்டத்தை எல்லைப்புற காந்தி பாராட்டியிருக்கிறார். பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் பாராட்டியிருக்கிறார்கள். வெளி நாட்டிலிருந்து வருகின்ற தூதுவர்கள் பாராட்டியிருக்கிறார்கள். நல்லவர்கள் அனைவரும் பாராட்டி இருக்கிறார்கள்.
திரு.ஆர். பொன்னப்ப நாடார்: திருமதி. இந்திரா காந்தி அம்மையார் அந்தத் திறப்பு விழாவிற்கு வர மறுத்துவிட்டதாகச் செய்தி சொல்கிறார்களே, அது உண்மையா.
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : மறுத்துவிட வில்லை. பல்வேறு நிகழ்ச்சிகள் இருந்த காரணத்தினால் வர இயலவில்லை. நல்லது சொல்லும்பொழுது இதுதான் கண்ணிலே