பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

21

உரிமைக் குழுவின் விதி பற்றிய பிரச்சினை நாள் : 31.08.1970

உரை : 54

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் திரு. சங்கரய்யா அவர்கள் ஏற்கனவே உரிமைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு, இந்த மன்றத்திலே அவைமுன்னவரால் வைக்கப்பட்டுள்ள இந்தப் பரிந்துரைக்கு திருத்தத்தைத் தந்து, அது மீண்டும் உரிமைக் குழுவிற்கான மறுபரிசீலனைக்குச் செல்லவேண்டுமென்று குறிப்பிட்டு ஒரு நீண்ட உரையினை ஆற்றி இருக்கிறார்கள்.

கவர்னர் உரையின்போது எப்படி நடந்துகொள்ளவேண்டு மென்பதற்காக நம்முடைய சட்டப்பேரவைக்கான விதிமுறைகள் வைக்கப்பட்டு இருக்கின்றன. அதைக் குறிப்பிடுகின்ற விதிதான் 12-வது விதி என்றும் நண்பர் திரு. சங்கரய்யா சுட்டிக்காட்டி, இந்த விதி 3 மாநிலங்களைத் தவிர, வேறு இடங்களில் இல்லை, நாடாளுமன்றத்தில், லோக்சபையில் இல்லை என்று எல்லாம் சுட்டிக்காட்டினார்கள். கவர்னர் அவர்களுடைய உரையின்போது அவர்கள் வெளிநடப்பு செய்ததற்கு என்ன காரணம் என்பதனையும் அவர்கள் குறிப்பிட்டார்கள். கீழ்வெண்மணியில் நடைபெற்ற கொடுமையைப்பற்றி விவாதிப்பதற்காக ஒரு ஒத்தி வைப்புத் தீர்மானத்திற்குத் தங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்ற காரணத்திற்காக தங்களுடைய தங்களுடைய உணர்ச்சிகளைக் காட்டிக்கொள்வதற்காக வெளிநடப்பிலே ஈடுபட்டோம் என்றும் அவர்கள் இங்கே வாதிட்டார்கள்.

அவர்கள் கவர்னர் அவர்கள் உரையாற்றிய நேரத்தில் இந்த இடத்திலே அமர்ந்து இருந்திருப்பாரானால், வெளி நடப்பிலே ஈடுபடாமல் இருந்திருப்பாரானால், கவர்னர் பெருமானுடைய உரையிலேயே இதுபற்றிக் குறிப்பிட்டிருந்ததைக் கேட்டிருப்பார்கள். It is a matter for regret that inspite of all