கலைஞரின் சட்டமன்ற உரைகள்
25
என்று திரு. சங்கரய்யா அவர்கள் இங்கே பேசியது எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. உலகத்தில் பல விஷயங்கள் ஞாபகத்தில் இருந்துகொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் தீர்மானம் கொண்டுவரப்பட்ட நேரத்தில், காங்கிரஸ் கட்சி இந்தத் தீர்மானத் தைக்கொண்டு வருவதற்கு உரிமை இல்லை. ஏனென்றால், போலீஸார் மேற்கொண்டிருந்த பூந்தாழங்குடி வழக்கை தி . மு . க அரசு திரும்பப் பெறுவதற்கு சம்மதித்த நேரத்தில் திரும்பப் பெறக்கூடாது என்று முட்டுக்கட்டை போட்டவர்கள் காங்கிரஸ் காரர்கள்தான். அவர்களுக்கு இந்தக் கண்டனத் தீர்மானம் கொண்டு வருவதற்கு என்ன உரிமை இருக்கிறது என்று திரு. சங்கரய்யா அவர்கள் முழக்கிய முழக்கங்கள் இந்த மாமன்றத்தின் சுவர்களில் எதிரொலித்துக்கொண்டிருக்கின்றன. அது வேறு விஷயம்.
இந்த விஷயத்தைப்பற்றி அவர் எடுத்துச்சொல்ல வேண்டுமென்று விரும்பினால், அந்த விஷயம் கவர்னர் உரையின்மீது நடைபெற்ற விவாதத்திலும் கண்டனத் தீர்மானத்தின் பேரில் நடந்த விவாதத்திலும் எடுத்துச் சொல்லப்பட்டு, விவாதிக்கப்பட்டிருக்கிறது. கவர்னர் அவர்களின் உரையின்பொழுது அவர்கள் அவசரப்படாமல், வெளிநடப்புச் செய்யாமல் அமர்ந்திருந்தால், கவர்னர் அவர்களுடைய உரையில் தொடக்கத்தில் நான் படித்துக்காட்டியபடி, அனுதாபத்தை இந்த மன்றம் முழுவதும் செலுத்தும்பொழுது தங்களுடைய பங்கையும் செலுத்தியிருக்கமுடியும்
கவர்னர் உரையின்போது வெளிநடப்புச் செய்வது உரிமை மீறிய செய்கை. கவர்னர் உரைக்கு வராமலே இருந்தாலும், இருந்துவிடலாம். நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்த சமயத்தில் ஒரு முறை கவர்னர் உரைக்கு வராமல் இருந்தபொழுது. காங்கிரஸ் கட்சி சார்பிலே எங்கள்மீது உரிமை மீறிய பிரச்சினை கொண்டுவரப்பட்டு, அது ஆராயப்படுகிற நேரத்தில், மன்றத்தில் வந்து அமர்ந்திருந்து உரிமை மீறுகின்ற காரியத்தில் ஈடுபட்டால் தான் உரிமை மீறுகின்ற வகையிலே வரும், வராமலே இருந்து விட்டால், உரிமை மீறுகிற வகையிலே வராது என்று சபாநாயகர் அவர்கள் தீர்ப்பு அளித்திருக்கிறார்கள். மன்றத்திற்கு வராமலேயே இருந்துவிடுவது என்பது வேறு, மன்றத்திற்கு உள்ளே வந்திருந்து,