கலைஞரின் சட்டமன்ற உரைகள்
307
கடைகள் மொத்தம் 1926 நிலையங்களின் சார்பிலும் நாம் இந்த விநியோகத்தை, 12 லட்சம் குடும்பங்களுக்கு அரிசி வழங்கு கிற இந்த ஏற்பாட்டைச் செய்து முடித்தோம்.
நகர்ப் பகுதிகளில், 500 ரூபாய்க்கு மேல் மாத வருமானம் உள்ளவர்களுக்குக் குறிப்பாக, சென்னை, கோவை போன்ற நகரங்களில் மாதம் ஒன்றுக்கு 10 கிலோ அரிசி வழங்கப்பட்டு வந்தது. அதை இப்போது 20 கிலோவாக உயர்த்தியிருக்கிறோம். அதோடு மாத்திரமில்லை. திருச்சி, சேலம் ஆகிய நகரங்களுக்கும் இந்தத் திட்டத்தை முதல் கட்டமாக நாம் விரிவுபடுத்தியிருக் கிறோம்; பிரதமர் அறிவித்த முதல் அம்சத்திற்கு நான் அளித்த விளக்கம் இது.
இரண்டாவது அம்சம், நில உச்சரவரம்பு. “நமது மக்களில் மிகப் பெரும்பாலோர் கிராமப் பகுதிகளில் வாழ்கின்றனர். நில உச்சவரம்புச் சட்டங்களைத் தீவிரமாகச் செயல்படுத்திச் சிலரிடம் உபரியாக இருக்கும் நிலங்களை எடுத்து, நிலமற்றவர்களுக்குப் பிரித்துக் கொடுக்க வேண்டும். நில உடைமை ஆவணங்களைத் தயாரித்து முடிப்பதில் உள்ளூர் மக்களின் உதவி நமக்குத் தேவையாகும்" என்பது பிரதமர் திருமதி இந்திரா காந்தியின் அறிவிப்பாகும்.
இந்த இரண்டாவது அம்சமாகிய உபரி நிலங்களை எடுத்து வழங்குவதில், நாம் தீவிரக் கவனம் செலுத்தி ஏற்கெனவே உபரி நிலங்களை எடுத்து வழங்கியிருக்கிறோம் என்பதைப் பார்க்க வேண்டும்.
"நூறு புதிய சாதனைகள்” என்று ஒரு புத்தகம் அவர்கள் போட்டிருக்கிறார்கள். அதில் இந்த விவரம் தவறாக இருக்கிறது. அதில், அவசர நிலைப் பிரகடனத்திற்குப் பிறகு எல்லா மாநிலங்களும் நில விநியோகத் திட்டத்தைத் தீவிரப்படுத்தி யுள்ளது என்று சொல்லி, அதில் தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில்கூட 10 லட்சம் ஏக்கர் நிலத்தை விநியோகிக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். அப்படி பத்து லட்சம் ஏக்கர் நிலத்தை விநியோகம் செய்யவில்லை. 10 லட்சம் ஏக்கரை விநி யோகம் செய்ய முடியுமா என்றால் கூட இயலாது. அதுவே எப்போது தெரியுமா? அவசர நிலைப் பிரகடனத்திற்குப் பிறகு,