கலைஞரின் சட்டமன்ற உரைகள்
349
தலைவரவர்களே! முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு தீர்மானம் என்ன?
1. அவசரக்கால பிரகடனத்தைத் திரும்பப் பெற வேண்டும்.
2. நாட்டின் புகழ்மிக்க தியாகத் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
3. பத்திரிகைகளின் கைக்கட்டுகளை அவிழ்த்துவிட்டு பத்திரிகைகளுக்கு நியாயமான உரிமைகளைத் தடையின்றி வழங்க வேண்டும்.
இதுதான் எங்கள் கட்சியின் எல்லாத் தீர்மானங்களிலும் உள்ள மைய அம்சம். இப்போது அம்சம் என்றால்தான் எல்லாருக்கும் புரியும் (சிரிப்பு.)
அவசரக்கால பிரகடனத்தைத் திரும்பப் பெறவேண்டும் என்பது முதலாவது அம்சம்.
நாட்டின் புகழ்மிக்க தியாகத் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பது இரண்டாவது அம்சம்.
பத்திரிகைகளுக்கு உரிய நியாயமான உரிமைகளை தடையின்றி வழங்க வேண்டும் என்பது மூன்றாவது அம்சம்.
இந்த அம்சங்களை எப்படி நிறைவேற்றுவது? "தமிழ் நாட்டு மக்கள் காந்தியடிகள் நெறியை மறவாமலும், ஜனநாயகச் சிங்கமாம் பேரறிஞர் அண்ணா அவர்கள் பாதையில் இருந்து தவறாமல் தமக்கே உரிய தனிப்பண்பாட்டுடன், அமைதியான முறையில் வன்முறை தவிர்த்து, வன்முறை இல்லாத வழியில், சட்டத்திற்கும் ஒழுங்கிற்கும் ஊறு நேரா வண்ணம் நாட்டுக்கு வந்துள்ள நெருக்கடி நிலைக்குத் தீர்வு காண வேண்டும் என்று இந்த செயற்குழு கேட்டுக் கொள்கிறது”. இதுதான் முதல் தீர்மானம்
"காந்தியடிகள் நெறி, அண்ணா அவர்களுடைய வழி, தமிழர்களுக்குரிய தனிப்பண்பாடு, அமைதியான முறை; இவற்றுடன் வன்முறையற்ற முறை, சட்டம், ஒழுங்கிற்கு ஊறு நேரா வண்ணம் நாட்டுக்கு வந்துள்ள நெருக்கடிக்குத் தீர்வு