பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/413

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

மந்திரிகளுடைய ஊழலை அம்பலப்படுத்துவேன்' என்று பேசியதாக கொட்டை எழுத்தில் மித்திரன் பத்திரிக்கையில் செய்தி வந்தது. அந்த பத்திரிகை வந்த அடுத்த இரண்டொரு நிமிஷத்திற்குள்ளாகக் அவரிடமிருந்து ஒரு தந்தி, தந்தியின் நகலும் கிடைத்தது. சுதேசமித்திரன் பத்திரிகைக்குத் தந்தி கொடுத்து 'நான் அப்படிப் பேசவில்லை. மந்திரிகள் ஊழல் என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை. நீங்கள் செய்தியைத் தவறாகப் போட்டிருக்கிறீர்கள் என்று சுதேசமித்திரன் பத்திரிகைக்குத் தந்தி கொடுத்து தந்தியின் நகல் திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களுக்கும் எனக்கும் அனுப்பி வைத்தார்கள். பொதுக் குழுவில்கூட அந்தத் தந்தி படித்துக் காண்பிக்கப்பட்டது. இந்த விளைவு ஏற்பட்டு, பொருளாளர் கட்சியில் இருந்து வெளியேறிய அந்தக் காலம் வரை, வெளியேறிய பிறகும் சுதேசமித்திரன் பத்திரிகைச் செய்தியை மறுக்கிற வகையில் இப்படிப்பட்ட புகார்கள் எழவில்லை.

ஆனால் யார் எந்த வகையில் முயற்சித்தார்களோ, அந்த ஆராய்ச்சிகளுக்குள் செல்ல விரும்பவில்லை - அவர்கள் பெற்ற வெற்றியின் அடையாளமாக புகார்ப் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அந்தப் புகார்ப் பட்டியலை எடுத்துச் சென்று ராஜ்பவனத்தில் ஆளுநரிடம் தரப்பட்டது. ஆளுநர்தான் அதைப் பெற்றுக் கொள்கிற உரிமை படைத்தவரா என்ற பிரச்சினையை எழுப்பிய பிறகு ஜனாதிபதியிடம் புகார் மனு கொண்டுபோய்க் கொடுக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து பல்வேறு கூட்டங்களில் இப்படிப்பட்ட ஊழல் செய்கிற ஆட்சி தமிழகத்தில் இருக்கக் கூடாது. அகற்றப்பட வேண்டுமென்று தொடர்ந்து, அந்தப் போராட்டம், நெருக்கடி காலத்தில் இந்திரா காந்தி அம்மையார் ராஜ்பவனத்திற்கு வந்தபோது அவரிடத்தில் மனுக் கொடுத்து, ஆட்சியை அகற்றுங்கள் என்று சொல்லுகிற அளவுக்கு வெடித்தது.

அவைகளை எல்லாம் மனதில் வைத்துக்கொண்டு பழி வாங்குகிற முறையில் இந்த ஆட்சியை ஐந்து ஆண்டுகளுக்குள் கவிழ்த்துவிட வேண்டுமென்ற கேடு நினைப்பு திராவிட