பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/487

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

486

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

அண்ணன் எனக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். அதை நான் படிக்கமுடியும், ஆனால் நேரமில்லை, முருகையனின் போர்த்திய சால்வைகூட ரத்தக் கறை படிந்து இருக்கிறதாம். அந்தச் சால்வையைக்கூட போலீசார் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. முருகையன் பாக்கெட்டிலே வைத்திருந்த சாவியை, அவர் கட்டியிருந்த கடிகாரத்தை அவர்கள் வைத்திருக் கிறார்கள். அதைத் திரும்பக் கொடுக்கவேண்டு மென்று கேட்டு அவர்கள் மனு போட்டார்கள். ஆனால் சர்க்கார் தரப்பு வக்கீல் அங்கே வாதாடியதைப்பற்றிக் கண்ணீர் சிந்தக் கடிதம் எனக்கு

எழுதியிருக்கிறார்கள்?

என்ன கடிதம் தெரியுமா? சர்க்கார் தரப்பு வக்கீல் வாதாடுகிறாராம். “என்ன கடிகாரம் தேவையா, காமராஜர் என்ன கடிகாரமா கட்டியிருந்தார்" என்று சர்க்கார் தரப்பு வக்கீல் கேட்கிறாராம். அதுமட்டுமில்லாமல், "அந்தச் சாவி தேவை என்றால் கோத்ரெஜ் பீரோதானே, அந்தக் கம்பெனிக்கு எழுதினால் இன்னொரு சாவி தர மாட்டானா?” என்று சர்க்கார் தரப்பு வக்கீல் கேட்கிறாராம். இப்படிப்பட்ட நிலையில் அவருடைய துணைவியாரையும், உற்றார் உறவினரையும் விசாரிக்காத சூழ்நிலையில் இன்றைக்கு முருகையன் படுகொலையைப் பற்றிப் இ புலன் விசாரணை நடைபெற்று இருக்குமேயானால், இந்த மன்றத்திலேயிருக்கின்ற எதிர்க்கட்சியாகிய நாங்கள், இதிலே சரியாக விசாரணை நடைபெறவில்லை என்கின்ற குற்றச்சாட்டை எடுத்துகாட்ட கடமைப்பட்டிருக்கின்றோம். இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்குப் பிறகாவது, இந்த அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று வற்புறுத்துகின்ற கடமையும் எதிர்க்கட்சியிலே இருக்கின்ற எங்களுக்கெல்லாம் நிச்சயமாக இருக்கின்றது.

இன்னொன்று, உளி வீச்சு சம்பவம் பற்றிப் பேசினார்கள். அது கேலிக்குரியதாக, கிண்டலுக்குரியதாக, எதிர்க்கட்சித் தரப்பிலே அனுதாபத்திற்குரியதாக அந்தப் பேச்சுக்கள் எல்லாம் அமைந்தன என்றாலும், நம்முடைய முதலமைச்சரவர்களும், நம்முடைய முன்னவரவர்களும் பேரவையிலும் மேலவையிலும் பேசுகின்ற நேரத்தில், நாங்கள் அதற்காக வருத்தப்படுகிறோம் என்று சொல்லியிருந்தாலும்கூட, உளி வீச்சு

சம்பவம்