பக்கம்:அருமையான துணை.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரியாத விஷயம் 55 பொழுது போகாத வேளைகளில், விளையாட்டுத் துனே இல்லாமல் சும்மா தானே ஆடிக் களித்து அலுத்த சமயங் களில், செல்லம் தோட்டத்தினுள் வந்து சுற்றித் திரிவாள். செடிகளே பார்ப்பாள். ஒன்றிரண்டு பூக்களைப் பறிக்கவும் செய்வாள். முத்துசாமி பார்த்தால் சத்தம் போடுவான், வீட்டுப் பெரியவர் அன்றுவரை அந்தச் சிறுபிள்ளையின் குரங்குத் தனத்தைக் கண்டதில்லை. முதல் தடவையாகப் பார்த்த போது ஆத்திரம்கொண்டுவிட்டார். பாவம்! அதன் பிறகு சில நாட்கள் வரை செல்லம் தோட்டத்தின் பக்கம் எட்டிப் பார்க்கவில்லே. அப்புறம் ஒருநாள், உலகத் யே விவக்க வாங்கிவிட் HJMsy 00SeS S AAAAA AAAA AAAA ee SAAAAA S தையே விலக்கு வாங்கவிடட ரான மாத சுதந்திரமாக உல்லாசமாகக் குதித்துக்கொண்டு வந்துசேர்ந்தாள். தண்டனை, கண்டிப்பு எல்லாம் சர்வ சகஜமானவை அவளது வாழ்க்கையில். வீட்டில் படாத அடியா தோலுக்கு மேலே தொண்ணுாறு அடி; துடைத்துவிட்டால் ஒண்ணு மில்லே! என்ற உணர்வு அவளுள் படிந்துகிடந்தது. மேலும், விளையாட்டுப் புத்தி அதிகம். தோட்டம் இனிமையான தோழி மாதிரி, வா வா’ என்று ஆசைகாட்டிக் கூப்பிட்டு திற்கிற போது அவள் எப்படி ஒதுங்கி இருந்துவிட முடியும்? வந்தாள். அவள் அப்பா செய்துகொண்டிருந்த காரி யத்தைப் பார்த்ததும், பதறிப்போளுள், ஐயோ எனக் கூறி, சிறு கையால் தன் வாய் புதைத்து நின்ருள் செல்லம். என்னட்டி? என்று சிடுப்புடன் திரும்பி மகளைப் பார்த் தான் கருமமே கண்ணுயிருந்த முத்துசாமி. செடிகளின் தலைகளை வெட்டி ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தான் அவன், முதிர்த்துவிட்ட கன்குவாழைச் .ெ ச டி க ளே ப் பிடுங்கிப் போட்டிருந்தான். : என்ன இப்படிப் பண்ணுதே பெரிய ஐயா கோபிக்கப் போருரு: என்ருள் மகள். செடியை எல்லாம் ஏன் இப்படி நாசமாக்குறே? பூவும் இலையுமா இதுகளே இப்படியா புடுங்கிப் டோடுவது? அன்னைக்கு அஞ்சாறு இலைகளை கிள்ளிப் போட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/64&oldid=738749" இலிருந்து மீள்விக்கப்பட்டது