பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

○

தமிழ் இலக்கிய ஆய்வுக் களத்தில் முதன் முதலாக 'டாக்டர்’ பட்டம் பெற்ற பெண்மணி திருமதி தே. தியாகராசன் அவர்கள். இடையருது வீசிய தம் புலமைத் தென்றலால் மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியை என்றும் இளவேனிலாக்கிக் கொண்டிருந்தவர்.

சுவிசேஷக் குடும்பத்தில் பிறந்து சுயமரியாதைக் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டவர். மலர்ந்த முகத்தோடு இன்சொல்லைப் படைத்து, விருந்தோம்பும் பண்பினர். இவரும் இவர் கணவரும் பாவேந்தர்பால் உள்ளார்ந்த அன்பு படைத்தவர்கள்.

கடல்கடந்தும் தமிழ்பரப்ப செக்கோசுலேவிய புறப்பட்ட அன்று, இக்கட்டுரையை அனுப்பி விமானம் ஏறினார். சாலைவியத்து அவரைச் சடலமாக்கித் தமிழகத்துக்கு அனுப்பி வைத்தது. பாவேந்தர் பற்றிய துணிச்சலான கருத்துக்களே இவர் தூய தமிழில் படைத்திருக்கிறார்.


O