பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/124



"தமிழ்நாட்டு இளைஞர்களும், நாட்டுப்பற்று, மொழிப்பற்று, தன்மானப்பற்று உண்மையாய்க் கொண்ட செல்வவான்களும் உங்களுக்கு உதவ வேண்டியது அவர்களது கடமை ஆகும்" என்று கூறினார். பிறகு பெரியாருக்கு மாலையிட்டுத் தோழர் முருகு. சுப்பிரமணியசெட்டியார் வாழ்த்துக் கூறி வழியனுப்பினார்கள்.

முத்தமிழ் நிலையத்திற்கு வருகைதந்து, பெரியார் பாராட்டிச் சொற்பொழிவாற்றிய அன்று, தாங்கள் நிலையத்திற்கு ஏதாவது பொருளுதவி செய்யவேண்டுமென்று கேட்டுக் கொண்டேன். பெரியார் அவர்கள் ஆவண செய்வதாகச் சொன்னார்கள், பெரியாரின் வருகைக்குப்பின் முத்தமிழ் நிலையம் புத்துணர்ச்சியோடு செயல்படத் தொடங்கியது.

இன்ப இரவு நாடகம் ஒரு கற்பனைச்சோலை; கலைக்களஞ்சியம். அதுபோன்ற ஒரு கலைநிகழ்ச்சியை இந்நாளில் காண முடியாது. "வாழியவே சீரோங்கியதமிழகம்" என்ற வாழ்த்துப் பல்லவியுடன் 'இன்ப இரவு' துவங்கும். இது சிம்மேந்திரமத்திபராகம், தாளம், பல்லவி, இரண்டாவது கல்யாணி ராகத்தில் "நீலவான் மீது தோன்றும் கோலமென்ன சொல்வேன் தோழி" என்ற பாட்டு. அது முடிந்ததும் வள்ளிக்கண்ணு என்ற பெண்மணியின் ‘கர்நாடக சதுர் அலாரிப்பு' நிகழ்ச்சி இடம்பெறும்.

நடிகர்கள் ஒப்பனை செய்யச் சிறிது நேரமாகும் போது திரு.வேணுகோபால் சர்மா† மேடையில் தோன்றி விகடம் செய்வார். அதாவது பாபநாசம் சிவன், விளாத்திகுளம் சாமி முதலிய இசைப்புலவர்கள் பாடுவது போலப் பாடி.


திரு. வேணுகோபால் சர்மா இன்று புகழ் பெற்ற ஒவியர், மத்திய அரசின் பரிசைப் பெற்ற திருவள்ளுவர் ஓவியம் இவரால் வரையப்பட்டது. நுட்பமான இசையறிவும், போலச் செய்யும் ஆற்றலும் (mimicry) மிக்கவர். பாவேந்தரோடு நீண்ட நாள் நெருக்கமாகப் பழகியவர் .