பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

🌕
பரபரப்புக்கும் பாராட்டுக்கும் காரணமான பல அறிஞர்களையும், அரசியல்வாதிகளையும் உருவாக்கிய பச்சையப்பர் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றவர் முருசரத்தனம்.

இன்று தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும் தமிழ்த் தலைமை நடத்தும், அறிஞர் மு.வ. வின் மாணவர் படைவரிசையில் முன்னணி வீரர்.

கொங்கு நாட்டுச் சேர்வராயன் மலைச்சாரலில் பிறந்து மதுரைப் பசுமலையின் அடிவாரத்தில் காதலித்துக் குடியேறியவர்.

அறிஞர் அண்ணாவின் முயற்சியால் நிறுவப்பட்ட மதுரைப் பல்கலைக் கழகத் திருக்குறள் ஆய்வகத்தின் இந்நாள் இணைப் பேராசிரியர், நூலாசிரியர்; மொழி ஆராய்ச்சி வல்லுநர்.

🌕