பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

179/இழந்த செல்வம்

கொண்டதில் எனக்கும் பெருமையும் பெருமிதமும் ஏற்பட்டன.'
அவர் தலைமையில் நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற திட்டம் அப்போதே என்னிடம் உருவாகியிருந்தது. ஆனால் அது நடை பெற முடியாதபடி சாக்காடு குறுக்கிட்டது.
கனக சுப்புரத்தினம் கவிஞர் ரத்தினம்; சுப்பிரமணிய பாரதியாரின் செழுஞ்சொற் பாப்புனைதிறத்தால் இழுக்கப்பட்டுப் பாரதிதாசனார் ஆனார். வண்டமிழ்ப் பாவிற்கு வேந்தராக விளங்கினர்.; அறிவிலும் உணர்விலும் வாழ்விலும் முதிர்ச்சியடைந்தார்; பைந்தமிழ் உலகம் அவரைப்பாராட்டியது; கருத்து வேறுபட்டோரும் அவர் பாத்திறத்தைப் பாராட்டினர். தமிழகம் அவரை ஒரு குரலிலே ஏற்றிப் போற்றியது.
பாவேந்தர்க்கு மனநிறைவில்லை. அவர் மனம் மேலும் புகழ் நாடியது; பொருள் நாடியது. தம் படைப்புக்கள் மீது நம்பிக்கை வைத்து அவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கச் செய்து உலகப்புகழ் பெற அவர் உள்ளம் விழைந்தது. தம் காவியங்களைப் படமாக்க வேண்டும் என்ற ஆசை கொண்டு முதிர்ந்த வயதில் பட்டணம் புறப்பட்டார். அவர் பண்டுதொட்டே அரசியல்வாதியுமாவார். ஆனால் தலைவராகவில்லை. முழுநேர அரசியற் பணியாளரே தலைவராவர். அரசியலோ கட்சியரசியலாகிக் கட்சிக்குள் குழு அரசியலுமாகிச் சீர்கெட்டது. பல்குழுப் பாழ் செய் உட்பகைக்குள் சிக்குண்டார் பாவேந்தர். இந்த அரசியல் பூசலுக்கு அவர் தகுதி பெற்றவர் இல்லை. அவர் தோல்வி கண்டார். அவர் அரசியலில் தூற்றுதலும் போற்றுதலும் மேற்கொண்டார். அவற்றுக்குப் பெரும்பான்மையான காரணம் அவர் நலம் கருதியே போலும். அவர் 'குயில்' அண்ணாவையும் எம்ஜியாரையும் தூற்றிப்பாடியது. தம் பேசும் வட வாய்ப்புக்கள் அவர்களால் கெட்டுவிட்டன என்ற