பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/24


தமிழும் நன்கறிந்த முத்தையா முதலியார், அவோக்கா (வழக்கறிஞர்) செல்ல நாயகர், அவோக்கா பெருமாள், நோயேல் போன்றவர்களுடன் சேர்ந்து கவியரசர் தன்மான இயக்கப் பணியை புதுவையில் பல எதிர்ப்புகளுக்கிடையே தோற்றுவித்துப் பணி புரிந்து வந்தார். அவர்களுள் பெருந்துன்பத்துக்கு அரசாங்கத்தாரால் ஆளாக்கப்பட்ட நோயேல் என்பவர் கவியரசரின் உயிர் நண்பராவார். அண்மையில் புதுவையில் நடந்த கவியரசரின் எண்பதாவது ஆண்டுவிழாவில் அவருடன் கலந்து பேசும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.

அந்நாளில் தன்மானக் கவிஞராக இருந்த ஒரே காரனத்தால் அரசாங்கத்தாலும், பொதுமக்களாலும், படித்த ஒருசிலராலும் இவரடைந்த அல்லல்கள் பல

அரசாங்கம் அவரை அடிக்கடி வேறு ஊர்களுக்கு மாற்றி விடும். பல தொல்லைகள் தரும். ஆனால் கவியரசர் அதற்கெல்லாம் சளைத்ததே கிடையாது. போக்குவரவு வசதி இல்லாத இடங்களிலேயே இவர் தமிழாசிரியர் பணிநடத்தப் பெரும்பாலும் உத்தரவு வரும். எங்கே சென்றாலும், எதிர்ப்பும் இவரைத் தொடர்ந்து கொண்டே வரும்.

இவர் காலத்திலேயே இவரைப் போன்று தமிழாசிரியர் பணிபுரிந்து வந்த துரைசாமி முதலியார் என்னும் ‘துரைசாமி வாத்தியார்' இவருக்குக் கொடுத்துவந்த தொல்லைகள் சொல்லிமுடியா. இவரைப் பற்றிச் 'சுய மரியாதைச் சுப்பன்' என்னும் தலைப்பில் எத்தனையோ கட்டுரைகள் வெளிவரும். அவற்றிற்கெல்லாம் ஆணித்தரமான காரண காரிய விளங்கங்களை எழுதிப் பகைவரான துரைசாமி வாத்தியாரை முறியடித்து வெற்றி வாகை சூடினார் கவியரசர்.

ஒரு முறை துரைசாமி வாத்தியார் கவியரசரைப்பற்றி