பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/44

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

Ο


புதுவை முத்தியால் பேட்டையில் பிறந்து, பாவேந்தரிடம் தமிழ் பயின்று, ஆசிரியர் பணி புரிந்தவர் புதுவைச் சிவம். எழுத்துப்புயல் பாவேந்தரோடும், கொள்கை மறவர் ம.நோயேலோடும் தோள் கொடுத்துப் புதுவையில் சுயமரியாதை இயக்கத்தை வளர்த்தவர். புதுவை முரசின் பொறுப்பாசிரியராக இருந்து பாதிரிமாரின் சட்டத் தாக்குதலுக்கு ஆளானவர்.

புதுவை நகர்மன்ற உறுப்பினராகவும், துணைமேயராகவும், பாராளுமன்ற மேலவை உறுப்பினராகவும் பணி புரிந்தவர்.

சங்கப் புலவர் கொல்லன் எழிசியைப் போல இவர் ul-Loop (Janatha Steel industries) நடத்துகிறார். ஓய்வு நேரத்தில் கவிதையும் எழுதுகிறார்.

1930 முதல் 1946 வரை பாவேந்தரோடு நெருங்கிப் பழகிய இவர், தம் நினைவுகளே இக்கட்டுரையில் நிழற் படமாக்கியிருக்கிறார் .

Ο