இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
45 அனைவரும் இனியன் பக்கம் திரும்பினர். அவனை அங்குக் காண வில்லை. அவன் ஓடினான் ! ஓடினான்! யாரும் அவனைப் பிடித்து மன்னிக்க முடியாத தூரத்துக்கு ஓடியே போய்விட்டான் ! குறிப்பு : 'இராசராசன், இறைவனின் 108 தாண்டவ நிலைகளைப் பெரிய கோயில் மேல்தளத்தின் உட்பாகத்து அடிவரிசையில் சிற்பங்களாகச் செதுக்க ஏற்பாடு செய்தான். வேலையும் தொடங்கி நடைபெற்றது. ஆனால் எக்காரணம் பற்றியோ. 81 சிற்பங் களைச்செய்து முடித்து 82-வது ஆரம்பித்து முடிக்காமல் விடப்பட்டிருக்கிறது" என்ற சரித்திரக் குறிப்பை அடிப்படையாக வைத்து இந்தக் கதை எழுதப்பட்டது.